For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கிறிஸ் கெய்லிடம் மன்னிப்பு கேட்ட அமிதாப் பச்சன்: எதற்கு தெரியுமா?

By Siva
Google Oneindia Tamil News

மும்பை: பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் மேற்கிந்திய தீவுகளை சேர்ந்த கிரிக்கெட் வீரர் கிறிஸ் கெயிலிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.

டி20 உலகக் கோப்பை போட்டிகள் நடந்து வருகிறது. கடந்த புதன்கிழமை மேற்கிந்திய தீவுகள், இங்கிலாந்து அணிகள் மோதிய ஆட்டம் மும்பையில் நடந்தது. அந்த போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி வீரர் கிறிஸ் கெய்ல் 48 பந்துகளில் 100 ரன்களை குவித்தார்.

அவர் 100 ரன்கள் எடுத்த அழகை பற்றி தான் கிரிக்கெட் ரசிகர்கள் இன்னும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் போட்டி மும்பையில் நடந்தும் நேரில் வந்து பார்க்காததற்கு பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் கிறிஸ் கெயிலிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.

இது குறித்து அமிதாப் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

அபாரம் கிறிஸ் கெயில்! மும்பையில் உங்களை சந்தித்து என் பாடல்களை நீங்கள் பாடி கேட்க முடியாமல் போனதற்காக மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். போட்டியை பார்த்தேன். வாவ் என்று தெரிவித்துள்ளார்.

அமிதாபின் ட்வீட்டுக்கு கெய்ல் போட்ட பதில் ட்வீட்டில் கூறியிருப்பதாவது,

நாம் நிச்சயம் சந்திக்கலாம். சியர்ஸ் என்று தெரிவித்துள்ளார்.

English summary
Bollywood star Amitabh Bachchan has apologized to cricketer Chris Gayle for not meeting him in Mumbai on wednesday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X