For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

51 லட்சம் நிதியுதவி, சொந்த ஆடைகளையும் 40 ஷூக்களையும் வழங்கினார் இந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன்!

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

மும்பை: கேரளத்துக்கு நிவாரண நிதியாக ரூ. 51 லட்சம் நிதியுதவியும் தனது சொந்த உடைகளையும் நடிகர் அமிதாப் பச்சன் வழங்கினார்.

கேரளத்தில் வரலாறு காணாத மழை பெய்தது. இதனால் 44 அணைகள் நிரம்பி விட்டன. இதையடுத்து 14 மாவட்டங்களும் தண்ணீரில் தத்தளித்தன. இதையடுத்து கேரள மாநிலம் மீண்டும் பழைய நிலைக்கு திரும்ப மற்ற மாநிலங்கள் தாராளமாக நிதியுதவி செய்து வருகின்றனர்.

Amitabh Bachchan donates Rs 51 lakhs

இந்நிலையில் கேரளா வெள்ள நிவாரணமாக ரூ. 51 லட்சத்தை கேரள முதல்வரின் நிவாரண நிதி வங்கி கணக்கில் நடிகர் அமிதாப் பச்சன் செலுத்தியுள்ளார். அதுமட்டுமல்லாமல் தான் பயன்படுத்திய ஆடைகளையும் சவுண்டு எடிட்டரான ரெசுல் பூக்குட்டி ஒருங்கிணைத்த அமைப்பு மூலம் வழங்கியுள்ளார்.

இதுகுறித்து பூக்குட்டி வட்டாரங்கள் கூறுகையில் நடிகர் அமிதாப் பச்சன் 51 லட்சம் நிதியுதவி அளித்தது மட்டுமல்லாது தான் பயன்படுத்திய 80 ஜாக்கெட்டுகள், 25 பேண்ட்கள், 20 சர்ட்கள், குளிருக்கு போர்த்தும் குல்லாக்கள் ஆகியவற்றை அவர் வழங்கியுள்ளார்.

இவர் மட்டுமல்லாமல் பாலிவுட் நடிகர்களான ஷாரூக்கான், சுஷாந்த் சிங் ராஜ்புட், ரித்திக் ரோஷன் உள்ளிட்டோரும் நிதியுதவி அளித்து வருகின்றனர் என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

English summary
Bollywood legend Amitabh Bachchan has contributed towards the relief work being coordinated by sound designer Resul Pookutty for Kerala Chief Minister's Distress Relief Fund.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X