காஷ்மீரில் தீவிரவாதிகள் முகாமை சுற்றிவளைத்த ராணுவம்.. அதிரடி தாக்குதல்.. கடும் சண்டை!
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் முகாமை இந்திய ராணுவத்தினர் சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.
காஷ்மீர் பிரச்சனை நிமிடத்திற்கு நிமிடம் பெரிதாக்கிக் கொண்டே செல்கிறது. ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அதிகாரம் ரத்து செய்யப்பட்டது பெரிய சர்ச்சையாகி இருக்கிறது. இதனால் காஷ்மீர் எல்லையில் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.
இந்த நிலையில்தான் ஜம்மு காஷ்மீரில் பாராமுல்லா பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக ராணுவத்திற்கு தகவல் சென்றுள்ளது. இதனால் வேகமாக அங்கு ராணுவ படை சென்றது.
பாராமுல்லாவில் ஒரு கிராமத்தில் பதுங்கி இருந்த தீவிரவாதிகள் மீது வேகமாக ராணுவத்தினர் தாக்குதல் நடத்த தொடங்கினார்கள். தீவிரவாதிகளின் முகாமை சுற்றிவளைத்து ராணுவத்தினர் தாக்குதல் நடத்தினார்கள்.
அங்கு 3-4 தீவிரவாதிகள் இருப்பதாக கூறப்படுகிறது. அவர்களை என்கவுண்டர் செய்யும் விதமாக தற்போது ராணுவத்தினர் தாக்குதல் நடத்தி வருகிறார்கள். இந்த தாக்குதல் குறித்த முழு விபரம் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது .