இன்று அதிகாலை அந்தமானில் நிலநடுக்கம்.. மக்கள் பீதி!
இன்று அதிகாலை அந்தமான் நிக்கோபார் தீவுகளில் மோசமான அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டு இருக்கிறது.
நிக்கோபார்: இன்று அதிகாலை அந்தமான் நிக்கோபார் தீவுகளில் மோசமான அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டு இருக்கிறது.
கடந்த வாரம் இந்தோனேசியாவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 7.5 ஆக பதிவானது பதிவானது. இதனால் சுனாமி ஏற்பட்டது.
இது பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. இதனால் மொத்தம் 17000 பேர் பலியாகினர். இறப்பு எண்ணிக்கை இன்னும் அதிகமாகும் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் இன்று அதிகாலை அந்தமானில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் இந்த நிலநடுக்கம் 4.5 ஆக பதிவாகி இருக்கிறது.
[ஓடி போன மாப்பிள்ளை.. கடைசியில் என்ன நடந்தது தெரியுமா.. படிச்சு பாருங்க.. ஷாக் ஆயிருவீங்க!]
அதிக அளவில் வீடுகள் இருக்கும் பகுதியில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டு இருக்கிறது. இதனால் என்ன மாதிரியான பாதிப்பு ஏற்பட்டது என்று இன்னும் தகவல் வெளியாகவில்லை.
அங்கு சுனாமி எச்சரிக்கை எதுவும் இதுவரை விடப்படவில்லை. உயிரிழப்பும் இதனால் ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது.