For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து கோரி முதல்வர் சந்திரபாபு நாயுடு தனது பிறந்தநாளான இன்று உண்ணாவிரதம்!

ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து கோரி முதல்வர் சந்திரபாபு நாயுடு உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    பிறந்த நாளன்று உண்ணாவிரதம் இருக்கும் ஆந்திர முதல்வர்-வீடியோ

    விஜயவாடா: ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து கோரி முதல்வர் சந்திரபாபு நாயுடு உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளார்.

    2014-ம் ஆண்டு நடந்த தேர்தலில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சியும் பாஜகவும் கூட்டணி வைத்தன. இதில் மத்தியில் பா.ஜ.க.வும் ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சியும் ஆட்சியைப் பிடித்தன.

    பா.ஜ.க.வும், தெலுங்கு தேசமும் கூட்டணி கட்சிகள் என்பதால், ஆந்திரா மாநிலத்துக்கு உடனடியாக சிறப்பு அந்தஸ்து கிடைத்து விடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பா.ஜ.க. அரசு ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து கொடுக்க எந்த ஒரு நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை.

    கூட்டணியில் இருந்து விலகல்

    கூட்டணியில் இருந்து விலகல்

    இதனைக்கண்டித்து, சந்திரபாபுநாயுடு பாஜக கூட்டணியில் இருந்து விலகுவதாக சமீபத்தில் அறிவித்தார். அதேபோல், சமீபத்தில் முடிவடைந்த நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்விலும் ஆந்திர மாநில எம்.பிக்கள் கடும் அமளியில் ஈடுபட்டு நாடாளுமன்றத்தை முடக்கினர்.

    அமைச்சர்கள் ராஜினாமா

    அமைச்சர்கள் ராஜினாமா

    மத்திய அரசைக் கண்டித்து ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்.பிக்கள் 5 பேர் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். அதேபோல், மத்திய அமைச்சரவையில் இடம் பெற்று இருந்த தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த இரண்டு அமைச்சர்களும் ராஜினாமா செய்தனர்.

    பிறந்த நாளில் உண்ணாவிரதம்

    பிறந்த நாளில் உண்ணாவிரதம்

    ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கக்கோரி, மத்திய அரசுக்கு சந்திரபாபு நாயுடு கடும் நெருக்கடியை கொடுத்து வருகிறார். இந்நிலையில் ஏப்ரல் 20 ஆம் தேதி தனது பிறந்த நாளான இன்று ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்காத மத்திய அரசை கண்டித்து சந்திரபாபுநாயுடு உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளார்.

    அமைச்சர்கள் பங்கேற்பு

    விஜயவாடாவில் நடைபெறும் இந்த ஒருநாள் உண்ணாவிரத போராட்டத்தில் 5 அமைச்சர்கள் மற்றும் தெலுங்கு தேசம் கட்சியினரும் ஈடுபட்டு உள்ளனர்.

    English summary
    Andhra Chief Minister Chandrababu Naidu keeps hunger strike today. Chandrababu Naidu demanding Special status for Andra. Chandrababu keeps hunger strike on his birthday.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X