வரதட்சணை கொடுமை… ஆந்திரா முதலிடம் பிடித்தது…
டெல்லி: நாட்டிலேயே வரதட்சணை கொடுமையில் ஆந்திரா மாநிலம்தான் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதில் எந்த மாநிலம்தான் முன்னணியில் இருக்கிறது என்று ஒரு தேசியகுற்றப்பதிவு ஆணைய தகவல் தெரிவிக்கிறது. இதில் ஆந்திரா முதலிடத்தில் இருக்கிறது.
அதாவது கடந்த 2012-ம் ஆண்டு மட்டும் சுமார் 2 ஆயிரத்து 511 வரதட்சணை கொடுமை வழக்குகள் ஆந்திராவில் பதிவாகி உள்ளன.
ஒடிசாவுக்கு இரண்டாவது இடம்:
ஆயிரத்து 487 வழக்குகளுடன் ஒடிசா மாநிலம் இரண்டாவது இடத்தைபிடித்துள்ளது.
பரவாயில்லை தமிழ்நாடு:
மேலும் பெண்கள் மீதான பிற வன்முறை தாக்குதலில் மத்திய பிரதேச மாநிலத்தில் ஒன்பதாயிரத்து 536-வழக்குகளும், தமிழ் நாட்டில் மூன்றாயிரத்து 838 வழக்குகளும் பதிவாகி யுள்ளதாக தேசியகுற்றப்பதிவு ஆணையம் தெரிவி்த்து உள்ளது.
வரதட்சணை கொடுமை இல்லை:
அருணாசலபிரதேசம் , இமாச்சலபிரதேசம், மணிப்பூர் , மேகாலயா, மிசோரம், நாகலாந்து, சிக்கிம், திரிபுரா மாநிலங்களில் வரதட்சணை கொடுமை வழக்குள் பதியப்படாவிட்டாலும் பிறவழக்குகள் அதி்கரித்து காணப்படுகி்ன்றன என்கிறது பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் அறிக்கை.
நாங்க வரதட்சணை மட்டும்தான் கேட்போம்:
அதேநேரம் உத்திரப்பிரதேசம், சட்டீஸ்கர் மாநிலங்களில் வரதட்சணை கொடுமை தவிர பிற வழக்குகள் எதுவும் பதிவாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.