ஆந்திராவில் பெண் அதிகாரியை மிரட்டிய ஆளுங்கட்சி எம்எல்ஏ கைது.. ஜெகன்மோகன் ரெட்டி அதிரடி உத்தரவு
அமராவதி: பெண் அதிகாரியை மிரட்டிய ஆளுங்கட்சி எம்.எல்.ஏ. ஸ்ரீதர் ரெட்டியை கைது செய்துள்ளது ஆந்திரமாநில போலீஸ். தொலைக்காட்சியில் வந்த செய்திகளின் அடிப்படையில் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி நடவடிக்கை எடுக்குமாறு நேரடியாக டிஜிபிக்கு உத்தரவிட்டதால் ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏவை அம்மாநில போலீசார் கைது செய்துள்ளனர்.
ஆந்திர மாநிலம் நெல்லூர் ரூரல் தொகுதி எம்.எல்.ஏ ஸ்ரீதர்ரெட்டி. இவர் ஆந்திராவை ஆளும் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர் ஆவார்.
ஆளும் கட்சியைச் சேர்ந்தவரான இவர் , நெல்லூர் பகுதி மண்டல வளர்ச்சி அதிகாரி சரளா என்பவரை தொலைப்பேசியில் மிரட்டியதாகவும் பின்னர் வீட்டுக்கு வந்து குடும்பத்தை மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.
அடுத்தடுத்து அதிரடி காட்டும் போலீஸ்.. திருச்சி லலிதா ஜுவல்லரி கொள்ளையில் முருகனின் உறவினர் கைது
வாங்க போலீஸ் மறுப்பு
இது தொடர்பாக சரளா, நேற்று இரவு அந்த பகுதியில் உள்ள போலீஸ் ஸ்டேசனில் புகார் கொடுத்திருக்கிறார். ஆளும் கட்சி எம்எல்ஏ ஸ்ரீதர்ரெட்டி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியறுத்தி உள்ளார். ஆனால் சரளாவின் புகாரை வாங்க அந்த போலீஸ் ஸ்டேசனில் உள்ள அதிகாரிகள் மறுத்துவிட்டனர்.
அலைகழிப்பு
ஸ்டேசனில் சப்-இன்ஸ் பெக்டர் இல்லாததால் அவரின் புகாரை வாங்க முடியாது என்று கூற மறுத்து அலைகழித்துள்ளார்கள். ஆனால் சரளா தான் சப்- இன்ஸ்பெக்டர் வரும் வரை காத்திருப்பதாக கூறி அங்கேயே அமர்ந்து கொண்டிருந்தார்.
டிவியை பார்த்த ஜெகன்
இந்த செய்தி டி.வி. சேனல்களில் ஒளிபரப்பாகியது. இதைப் பார்த்த முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி உடனே டி.ஜி.பி., கலெக்டரை தொடர்பு கொண்டு என்ன நடந்தது என்பது குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டார்.
அதிகாரியிடம் விசாரணை
இதையடுத்து ஆந்திர டி.ஜி.பி. சம்பவ இடத்துக்கு நேரில் சென்று பெண் அதிகாரியிடம் விசாரணை நடத்தினார். பின்னர் ஜெகன்மோகன் ரெட்டியிடம் எம்.எல்.ஏ. மிரட்டியது குறித்து தகவலை கூறியிருக்கிறார்.
எம்எல்ஏ கைது
இதை கேட்ட ஜெகன்மோகன் ரெட்டி யார் தவறு செய்திருந்தாலும் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுங்கள். தயவு தாட்சணை வேண்டாம் என்றார் இதனால் பெண் அதிகாரியை மிரட்டிய ஸ்ரீதர்ரெட்டி எம்.எல்.ஏ.வை போலீசார் உடனடியாக கைது செய்தனர்- ஆளும் கட்சி எம்எல்ஏவை கைது செய்ய முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவிட்ட சம்பவம் அம்மாநில மக்கள் மற்றும் கட்சிகளிடையே வியப்பை ஏற்படுத்தி உள்ளது.