For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆந்திரா: லாக்டவுனில் பொழுது போகாமல் சீட்டு விளையாடிய டிரைவர்... விளைவு 24 பேருக்கு கொரோனா பாதிப்பு

Google Oneindia Tamil News

விஜயவாடா: ஆந்திராவில் லாக்டவுன் காலத்தில் பொழுது போகாமல் நண்பர்களுடன் சீட்டு விளையாடிக் கொண்டிருந்த டிரைவர் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவருடன் சீட்டு விளையாடிய நண்பர்களுக்கு நடத்தப்பட்ட சோதனையில் 24 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திராவின் விஜயவாடாவில் கண்டெய்னர் லாரி ஓட்டுநர் ஒருவர் தமது நண்பர்களுடன் பொழுது போக்குக்காக சீட்டு விளையாடிக் கொண்டிருந்தார். தற்போது அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

Andhra: Truck driver plays card game with friends - 24 test Coronavirus positive

இதனையடுத்து அந்த ஓட்டுநருடன் சீட்டு விளையாடியவர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. மொத்தம் 40 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

Recommended Video

    வுஹானில் பரவிய அதே வகை கொரோனா... குஜராத்தில் பாதிப்புக்கு காரணமா?

    இச்சோதனையில் 24 பேருக்கு கொரோனா தொற்று நோய் உறுதி செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதேபோல் ஆந்திராவின் கரீம் நகரிலும் டிரைவர் ஒருவர் சீட்டு விளையாடியதால் 15 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.

    English summary
    A bored truck drivers effort to kill time by indulging in a game of cards with friends and neighbours led to the infection of coronavirus in 24 people in one locality of Vijayawada city in Andhra Pradesh.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X