ஆந்திரா: லாக்டவுனில் பொழுது போகாமல் சீட்டு விளையாடிய டிரைவர்... விளைவு 24 பேருக்கு கொரோனா பாதிப்பு
விஜயவாடா: ஆந்திராவில் லாக்டவுன் காலத்தில் பொழுது போகாமல் நண்பர்களுடன் சீட்டு விளையாடிக் கொண்டிருந்த டிரைவர் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவருடன் சீட்டு விளையாடிய நண்பர்களுக்கு நடத்தப்பட்ட சோதனையில் 24 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திராவின் விஜயவாடாவில் கண்டெய்னர் லாரி ஓட்டுநர் ஒருவர் தமது நண்பர்களுடன் பொழுது போக்குக்காக சீட்டு விளையாடிக் கொண்டிருந்தார். தற்போது அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதனையடுத்து அந்த ஓட்டுநருடன் சீட்டு விளையாடியவர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. மொத்தம் 40 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
Recommended Video
இச்சோதனையில் 24 பேருக்கு கொரோனா தொற்று நோய் உறுதி செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதேபோல் ஆந்திராவின் கரீம் நகரிலும் டிரைவர் ஒருவர் சீட்டு விளையாடியதால் 15 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.