For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஸ்டெர்லைட் ஆலை விரைவில் திறக்கப்படும்.. அகர்வால் பரபரப்புத் தகவல்

Google Oneindia Tamil News

Recommended Video

    ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்படும் - அணில் அகர்வால்- வீடியோ

    டெல்லி: ஸ்டெர்லைட் ஆலை விரைவில் திறக்கப்படும் என்று வேதாந்தா நிறுவனத்தின் தலைவர் அனில் அகர்வால் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை தமிழக அரசின் ஆணையின்படி கடந்த மே மாதம் 28-ஆம் தேதி சீல் வைக்கப்பட்டது. இதனை எதிர்த்து ஸ்டெர்லைட் நிர்வாகம் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளது.

    Anil Agarwal says that Sterlite industry will be opened soon

    இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, ஸ்டெர்லைட் நிறுவனத்தில் ஆய்வு செய்வதற்காக குழு அமைத்து உத்தரவிட்டார். அதன்படி, ஓய்வுபெற்ற ஹைகோர்ட் நீதிபதி தருண் அகர்வால் தலைமையில் மத்திய சுற்றுச்சூழல் வனத்துறை மற்றும் பருவநிலை மாற்றத்துக்கான அமைச்சக விஞ்ஞானி சதீஷ் சி.கர்கோட்டி, மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரிய மண்டல இயக்குனரக என்ஜினீயரும், விஞ்ஞானியுமான வரலட்சுமி ஆகியோர் அடங்கிய குழு அமைக்கப்பட்டது.

    [ஹைட்ரோ கார்பன் ஒப்பந்தம் கையெழுத்தானது.. தமிழகத்தில் 2 இடத்தில் வேதாந்தா.. ஒன்றில் ஓஎன்ஜிசி]

    இந்த குழுவினர் தூத்துக்குடி, சென்னை ஆகிய பகுதிகளில் கருத்து கேட்பு கூட்டத்தை நடத்தினர். அதில் பெரும்பாலான மனுக்கள் ஆலையை திறக்க வேண்டாம் என்றே இருந்ததாக தெரிகிறது.

    இந்நிலையில் டெல்லியில் வேதாந்தா தலைவர் அனில் அகர்வால் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் ஸ்டெர்லைட் ஆலை விரைவில் திறக்கப்படும் என்ற நம்பிக்கை உள்ளது என்றார் அகர்வால்.

    English summary
    Anil Agarwal says that Sterlite industry will be opened soon. He says this in press meet in Delhi.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X