கர்நாடக தேர்தலில் வாக்களித்த அனில் கும்ப்ளே, ராகுல் டிராவிட்
கர்நாடக தேர்தலில் அனில் கும்ப்ளேவும் ராகுல் டிராவிட்டும் வாக்களித்தனர்.
பெங்களூர்: கர்நாடக தேர்தலில் அனில் கும்ப்ளேவும் ராகுல் டிராவிட்டும் அவரவர் தொகுதிகளில் வாக்களித்தனர்.
கர்நாடக மாநில சட்டசபை தேர்தல் இன்று நடைபெறுகிறது. இதற்கான வாக்குப் பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது. மாலை 6 மணி வரை நடைபெறுகிறது.
பெரும்பாலான தொகுதிகளில் வாக்குப் பதிவு இயந்திரங்கள் கோளாறு ஏற்பட்டதை அடுத்து வாக்கு பதிவு தாமதமானது. இந்நிலையில் பெங்களூரில் வசித்து வரும் முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான்கள் அனில் கும்ப்ளே, ராகுல்டிராவிட் ஆகியோர் அவரவர் தொகுதிகளில் குடும்பத்தினருடன் வந்து வாக்களித்தனர்.
We have!!! Have You!!! #KarnatakaElections2018 pic.twitter.com/QRyui7xVwV
— Anil Kumble (@anilkumble1074) May 12, 2018
அனில் கும்ப்ளே பனசங்கரியிலும், ராகுல் டிராவிட் இந்திரா நகரிலும் வாக்களித்தனர். இதை அனில் கும்ப்ளே தனது டுவிட்டர் பக்கத்திலும் வெளியிட்டுள்ளார்.
Waiting for our turn to vote! Urging everyone to exercise their rights as citizens! #KarnatakaElections2018 pic.twitter.com/O30QqqZlxW
— Anil Kumble (@anilkumble1074) May 12, 2018