மகராஷ்டிராவில் நக்சல்கள் பகுதியில் அசத்தும் 'தில்' பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர்!
மஹாராஷ்ட்ராவில் நக்சல்கள் அதிகம் நடமாடும் பகுதியில் பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் அஞ்சலி விரும்பி சென்று பணியில் சேர்ந்துள்ளார்.
நாக்பூர்: மகராஷ்டிராவில் நக்சலைட்டுகள் அதிகம் இருக்கும் கட்ச்ரோலி பகுதியில் பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் அஞ்சலி விரும்பி பணியில் சேர்ந்துள்ள சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்ட்ரா மாநிலத்தில் நக்சல்கள் அதிகம் நடமாடும் பகுதியான பாம்ராகர் போலீஸ் நிலையத்தில் ஆண் காவல்துறை அதிகாரிகளே பணிபுரிய அச்சப்படுவர். இந்த நிலையில் அஞ்சலி என்னும் போலீஸ் இன்ஸ்பெக்டர் விரும்பி சென்று அப்பகுதியில் பணிக்கு சேர்ந்துள்ளார்.
2011-12ஆம் ஆண்டு அவுரங்காபாத்தில் சப் இன்ஸ்பெக்ட்ராக சேர்ந்தார் அஞ்சலி. நகர்புறத்தில் பணிபுரிந்த போதும் அவருக்கு நக்சல்கள் அதிகம் இருக்கும் கட்ச்ரோலி பகுதியில் பணிபுரிய வேண்டுமென விருப்பம்.
இதனால் உயர் அதிகாரிகளிடம் இடமாறுதலை கேட்டுப் பெற்று இந்தப் பகுதிக்கு வந்துள்ளார். நக்ஸலைட்டுக்கள் ஆதிக்கம் உள்ள இப் பகுதியில் பணிபுரிய வருவதற்கு முன்பு 15 நாட்கள் சிறப்பு ஆயுத பயிற்சி மேற்கொண்டார். அவருக்கு சீனியர் அதிகாரி ஆர்த்தி சிங் மற்றும் அஞ்சலியின் தாயார் ஆகியோர் ஊக்குவித்து வருகின்றனர்