ஸ்ரீதேவி மறைந்தாலும் என் நினைவுகளில் வாழ்வார்: பெரிய நட்சத்திரத்தை இழந்துவிட்டோம்- அனுபம்கெர்
ஸ்ரீதேவி மறைந்தாலும் என் நினைவுகளில் வாழ்வார் என்று இந்தி நடிகர் அனுபம்கெர் தெரிவித்தார்.
Recommended Video
மும்பை: ஸ்ரீதேவி மறைந்தாலும் என் நினைவுகளில் அவர் வாழ்வார் என்றும் பெரிய நட்சத்திரத்தை இழந்துவிட்டோம் என்றும் அனுபம் கெர் தெரிவித்தார்.
துபாயில் நடிகர் மோஹித் மார்வாவின் திருமணத்துக்காக ஸ்ரீதேவி, போனி கபூர் மற்றும் மகள் குஷி ஆகியோருடன் சென்றிருந்தார். இந்நிலையில் அவர் ஹோட்டல் அறையில் உள்ள பாத்ரூமில் மயங்கி கிடந்தார்.
அவரை போனி கபூர் மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றபோது அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறிவிட்டனர். இதனால் குடும்பத்தினர், திரையுலகினர், ரசிகர்கள் ஆகியோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
அவரது உடல் இன்று துபாயிலிருந்து மும்பை கொண்டு வரப்படுகிறது. ஸ்ரீதேவியின் இறப்பு குறித்து நடிகர் அனுபம்கெர் கூறுகையில், ஸ்ரீதேவி இறந்தாலும் எனது நினைவில் வாழ்வார்.
ஸ்ரீதேவியை கடந்த காலத்தில் பேசுவது வருத்தமளிக்கிறது. நம் நாட்டின் மிகப் பெரிய நட்சத்திரத்தை இழந்துவிட்டோம். அவர் இறந்துவிட்டார் என்ற செய்தியை மனதில் பதிவு செய்ய இன்னும் சில காலம் ஆகும் என்றார்.