சிக்கினான்டா சிவனாண்டி: ட்விட்டரில் மீண்டும் அனுஷ்காவை வருத்தெடுக்கும் ரசிகர்கள்
மும்பை: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் போட்டி தொடரை இந்தியா இழந்ததற்கு பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா தான் காரணம் என்று கூறி அவரை பலரும் ட்விட்டரில் கிண்டல் செய்கிறார்கள்.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் போட்டி தொடரை இந்தியா இழந்துள்ளது. இந்த தொடரில் விராட் கோஹ்லியின் ஆட்டம் மோசமாக இருந்தது என்று விமர்சிக்கப்படுகிறது. இந்நிலையில் தொடரை இந்தியா இழந்ததற்கும், கோஹ்லியின் மோசமான ஆட்டத்திற்கும் அவரின் காதலியும், பாலிவுட் நடிகையுமான அனுஷ்கா சர்மா தான் காரணம் என்று ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.
இது தொடர்பாக அவர்கள் அனுஷ்காவை ட்விட்டரில் திட்டியும், கிண்டலும் செய்து வருகிறார்கள்.
|
ரோஹித்
அனுஷ்காவை பெரிய திரையில் பார்த்ததும் ரோஹித் அவுட் ஆகிவிட்டார். அனுஷ்காவை பார்த்ததும் ரோஹித் ஏன் அவுட்டானார் என்பதை தெரிந்து கொள்ள கோஹ்லி அவுட் ஆனார் என சில்லி பாயிண்ட் ட்வீட் செய்துள்ளார்.
|
அனுஷ்கா
அனுஷ்கா தனது படங்களை விட கடைசி இரண்டு பந்துகளின்போது தான் அதிகம் முகபாவனை காட்டியுள்ளார் என கபீர் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
|
தடை
ஷாருக்கானுக்கு தடை விதித்ததற்கு பதிலாக எம்.சி.ஏ. அனுஷ்காவுக்கு தடை விதித்திருக்க வேண்டும் என சகேத் அலோனி கூறியுள்ளார்.
|
டிவி
அனுஷ்கா தயவு செய்து இந்தியாவுக்காக இனியாவது போட்டிகளை ஸ்டேடியத்திற்கு வந்து பார்க்காதீர்கள். தயவு செய்து டிவியில் பாருங்கள் என்கிறார் பிரியங்கா.
பாவம்
கோஹ்லி எப்பொழுது மோசமாக விளையாடினாலும் ரசிகர்கள் அனுஷ்காவை தான் குற்றம்சாட்டுகிறார்கள். இந்திய அணி தோல்வி அடைந்தால் அனுஷ்கா ஸ்டேடியத்திற்கு வருவது தான் காரணம் என்கிறார்கள். ரசிகர்கள் அனுஷ்காவை கிண்டல் செய்வது இது ஒன்றும் முதல் முறை அல்ல.