For Daily Alerts
Just In
அணு உலை கட்டுவதற்கு முன் ரூ500 கோடி கொடுங்க.. ஆந்திரா அதிரடி நிபந்தனை!!
ஸ்ரீகாகுளம்: ஆந்திராவின் ஸ்ரீகாகுளத்தில் அணு உலை அமைக்க வேண்டுமானால் நிலம் கையகப் பணிகளுக்காக இந்திய அணுசக்திக் கழகம் ரூ.500 கோடி செலுத்த வேண்டும் என்று அம்மாநில அரசு அதிரடியாக நிபந்தனை விதித்துள்ளது.
ஸ்ரீகாகுளம் மாவட்டம் கொவ்வாடா என்ற இடத்தில் 1,600 மெகாவாட் வீதம் மொத்தம் 9,600 மெகாவாட் மின்உற்பத்திக்கான 6 அலகுகளைக் கொண்ட அணு உலையை அமைக்க இந்திய அணுசக்திக் கழகம் திட்டமிட்டுள்ளது.
இதற்காக ரூ.1 லட்சம் கோடி மதிப்பிலான 2,216 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்த வேண்டும் என அணுசக்திக் கழகம் கோரிக்கை வைத்தது.
இதுகுறித்து ஸ்ரீகாகுளம் மாவட்ட ஆட்சியர் லக்ஷ்மி நரசிம்மன் கூறுகையில், நிலம் கையகப் பணிகள், மறுவாழ்வு நடவடிக்கைகளுக்காக ரூ.500 கோடி செலுத்துமாறு கோரியுள்ளோம்; பணம் வந்த பிறகே நிலங்களை கையகப்படுத்த தொடங்குவோம் என்றார்.
Comments
English summary
The AP govt. asked the Nuclear Power Corporation of India Ltd, which is proposing to set up a Nuclear Power plant in Srikakulam district, to deposit Rs 500 crore for initiating the land acquisition process.
Story first published: Friday, June 5, 2015, 10:10 [IST]