உங்களுடன் சேர்ந்து ஒரு போட்டோ எடுத்துக்கலாமா?: மலாலாவை கேட்ட நடிகர் அர்ஜுன் கபூர்
மும்பை: பாலிவுட் நடிகர் அர்ஜுன் கபூர் நியூயார்க் நகரில் பாகிஸ்தான் சிறுமி மலாலா யூசுப்சாயை பார்த்ததும் உங்களுடன் சேர்ந்து ஒரு புகைப்படம் எடுத்துக் கொள்ளலாமா என்று அவரிடம் கேட்டுள்ளார்.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் கடந்த வாரம் குளோபல் சிட்டிசன் பெஸ்டிவல் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூரின் மகனும், நடிகருமான அர்ஜுன் கபூர் கலந்து கொண்டார்.
நிகழ்ச்சியில் பெண் கல்விக்காக குரல் கொடுத்து தாலிபான்களால் சுடப்பட்டு மறுஜென்மம் எடுத்த பாகிஸ்தான் சிறுமி மலாலா யூசப்சாயும் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் மலாலா ஆற்றிய உரை அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.
The first & only time I rem askin some1 for a picture.She gives humanity hope for a better future @MalalaFund #Malala pic.twitter.com/Ax72r4a4R7
— Arjun Kapoor (@arjunk26) September 28, 2015
மலாலாவை பார்த்த அர்ஜுன் கபூருக்கு அவருடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. வழக்கமாக நடிகர், நடிகைகளுடன் புகைப்படம் எடுக்கத் தான் பிறர் ஆசைப்படுவார்கள். இங்கு அர்ஜுன் மலாலாவிடம் சென்று உங்களுடன் சேர்ந்து ஒரு புகைப்படம் எடுத்துக் கொள்ளலாமா என்று கேட்டுள்ளார். அவர் சரி என்றதும் புகைப்படம் எடுத்து அதை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.
இது குறித்து அர்ஜுன் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
ஒருவருடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொள்ளலாமா என நான் முதன்முதலாக கேட்டேன். அவர் மனிதத்திற்கு புதிய நம்பிக்கை அளிக்கிறார் #Malala என தெரிவித்துள்ளார்.