For Daily Alerts
Just In
உ.பி.யில் ராணுவ ஹெலிகாப்டர் ஆற்றில் விழுந்து 3 பேர் பலி
பரேலி: உத்தரப்பிரதேச மாநிலம் பரேலியில் விமானப் படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் ஆற்றில் விழுந்து 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
பரேலியில் விமானப்படை பயிற்சி முகாம் உள்ளது. இங்கு இன்று காலை ஹெலிகாப்டரில் வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டனர்.
அதில் விமானப்படை அதிகாரிகள், வீரர்கள் உள்பட 6 பேர் பயணம் செய்தனர். அந்த ஹெலிகாப்டர் நகாதா ஆற்றின் மீது பறந்து சென்றபோது திடீர் என்று விபத்துக்குள்ளாகி ஆற்றுக்குள் விழுந்தது.
இதில் 3 ராணுவ அதிகாரிகள் பலியானார்கள். பைலட் உள்பட 3 பேர் படுகாயத்துடன் மீட்கப்பட்டு ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
Comments
English summary
An army helicopter has crashed at Bareilly airbase in Uttar Pradesh on Wednesday morning with three feared dead in the unfortunate accident, as per reports coming.
Story first published: Wednesday, October 1, 2014, 11:08 [IST]