"பார்ட்டி"க்கு வாங்க.. அன்பாக அழைத்த நண்பர்.. மனைவியுடன் நம்பி போய்.. கடைசியில் நடந்த அராஜகம்!
விருந்து தருவதாக சொல்லி நண்பனின் மனைவியை பலாத்காரம் செய்தார் ஒருவர்
கான்பூர்: பார்ட்டி கொடுப்பதாக நண்பன் அழைத்ததால், நம்பி மனைவியுடன் சென்றார் ஒருவர்.. இறுதியில், கூல்டிரிங்ஸ்சில் மயக்க மருந்து கொடுத்து, மனைவியை பலாத்காரமே செய்துவிட்டார்.
நாளுக்கு நாள் உத்தரபிரதேசத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாமல் இருக்கிறது.. ஏராளமான வன்கொடுமைகள் நடந்து வருகின்றன... இதனை எதிர்க்கட்சிகள் விமர்சித்து வரும் நிலையில், அம்மாநிலத்தில் தொடர்ந்து பெண்கள் மீதான வன்கொடுமைகள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன.
அந்த வகையில் கான்பூரிலும் ஒரு சம்பவம் நடந்துள்ளது.. ராணுவத்தில் பணிபுரியும் ஒருவர் கர்னலாக பதவி உயர்வு பெற்றுள்ளார்.. இதற்காக தன் நண்பனுக்கு ஒரு பார்ட்டி தருவதாகவும், அதற்கு குடும்பத்துடன் வரும்படியும் அழைத்துள்ளார்.
நண்பனின் அழைப்பை தட்ட முடியாமல், இவரும், தன் மனைவியை அந்த பார்ட்டிக்கு அழைத்து சென்றுள்ளார்.. அங்குதான், கூல்டிரிங்சில் மயக்க மருந்து கலந்து தந்துவிட்டு, மனைவியை நண்பனே பலாத்காரம் செய்துள்ளதாக கூறப்படுகிறது... விருந்துக்கு வந்த இடத்தில் பலாத்காரம் செய்யப்படுவதை அறிந்த அந்த பெண், கடுமையாக எதிர்த்து போராடி உள்ளார்..
ஆனால், கர்னல், அந்த பெண்ணை ஆத்திரத்தில் சரமாரியாக தாக்கியதாக தெரிகிறது. பாதிக்கப்பட்ட பெண் ரஷ்ய நாட்டை சேர்ந்தவராம்.. திருமணமாகி 10 வருஷமாக இந்தியாவில்தான் வசித்து வந்துள்ளார்.
மயக்கம் தெளிந்தபிறகுதான், மனைவிக்கு நேர்ந்த கொடுமை நண்பனுக்கு தெரிந்துள்ளது.. இதையடுத்து, கான்பூர் ஸ்டேஷனில் கணவன் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின்பேரில் போலீசார் விசாரணையை மேற்கொண்டனர்.. இறுதியில் பெண்ணை பலாத்காரம் செய்த கர்னலை கைது செய்யும் நடவடிக்கைகளில் இறங்கி உள்ளனர்.. சம்பந்தப்பட்ட நபர் மீது போலீசார் வழக்கும் பதிவு செய்துள்ளனர்.