For Daily Alerts
Just In
பஞ்சாப்பில் பொதுமக்கள் மீது ராணுவ வீரர் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு- 4 பேர் பரிதாப பலி
சண்டிகர்: பஞ்சாப் மாநிலத்தில் பொதுமக்கள் மீது கண்மூடித்தனமாக ராணுவ வீரர் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 4 பேர் பரிதாபமாக பலியாகினர்.
பஞ்சாப் மாநிலத்தில் சங்ரூர் என்ற பகுதியில் ஜக்தீப் என்ற ராணுவ வீரர் வீட்டின் கூரைமேல் நின்றுகொண்டு முழக்கங்களை எழுப்பினார். பின்னர் சாலையில் சென்றவர்களை நோக்கி கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுடத் தொடங்கினார். பின்னர் தன்னைத் தானேயும் சுட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இந்த திடீர் தாக்குதலில் பொதுமக்கள் 4 பேர் பரிதாபமாக கொல்லப்பட்டனர். பலர் படுகாயமடைந்துள்ளனர். அதே நேரத்தில் போலீசார்தான் அந்த ராணுவ வீரரை சுட்டுக் கொன்றதாகவும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன.
புனித நூலை அவமதித்ததாக சீக்கியர்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டு வரும் நிலையில் ராணுவ வீரரின் இந்த வெறிச்செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Comments
English summary
At least four people were killed and four others injured on Tuesday when an army man opened indiscriminate fire in Sangrur area of Punjab.
Story first published: Tuesday, October 20, 2015, 17:19 [IST]