இறந்த போன ராணுவ வீரரின் மனைவிக்கு புது வீடு கட்டிக்கொடுத்து.. கைகளில் நடக்க வைத்த சக வீரர்கள்
அசாமில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரரின் மனைவி வறுமையுடன் குடிசை வீட்டில் இருப்பதை கண்டு வேதனை அடைந்த சக ராணுவ வீரர்கள் ஒன்று சேர்ந்து புது வீடு கட்டிக்கொடுத்து அசத்தி உள்ளனர்.
மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்தவர் ராணுவ வீரர் மோகன் சிங். இவர் கடந்த 1992ஆம் ஆண்டு அசாமில் நடந்த ராணுவ நடவடிக்கையின் போது வீர மரணமடைந்தார். அவர் மறைவுக்கு பின்னர் அவரது குடும்பம் வறுமையின் கோரப்பிடியில் சிக்கியது.
நாட்டுக்காக உயர்நீத்த ராணுவ வீரர் மோகன் சிங்கின் மனைவி வீடு இல்லாமல், குடிசை வீடு ஒன்றில் வசித்து வந்தார்.
இதையறிந்த சக ராணுவ வீரர்கள் மிகுந்த வேதனை அடைந்தார்கள். அவர்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து உதவ முடிவு செய்தனர். இதன்படி நீண்டகால முயற்சிக்குப் பின்னர் மோகன் சிங்கின் வீடு ஒன்றை கட்டித்தந்துள்ளார்கள்.
அத்துடன் அந்த வீட்டிற்கு சொந்த செலவில் புதுமணை புகுவிழா நடத்திய ராணுவ வீரர்கள், முதல்முறையாக புது வீட்டுக்குச் செல்லும் நண்பரின் மனைவியை தங்களின் கைகள் மீது நடக்க வைத்து அனுப்பினார்கள். இந்த நிகழ்வை கண்டவர்களின் ஆனந்த கண்ணீர் வடித்தனர்.