ராணுவ அதிகாரியை அடித்து நொறுக்கிய சுங்கச்சாவடி ஊழியர்கள்: அதிர்ச்சி வீடியோ
Recommended Video
சுரு: ராஜஸ்தானில் ராணுவ அதிகாரி ஒருவரை சுங்கச் சாவடி ஊழியர்கள் தாக்கிய சம்பவம் நடந்துள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் சுரு மாவட்டத்தில் உள்ள தாதார் பகுதியில் சுங்கச் சாவடி ஒன்று செயல்பட்டு வருகிறது. செவ்வாய்க்கிழமை ராணுவ அதிகாரி ஒருவர் அந்த சுங்கச்சாவடி வழியாக சென்றுள்ளார்.
தனது அடையாள அட்டையை காண்பித்து தான் ஒரு ராணுவ அதிகாரி என்றும், வரி செலுத்துவதில் இருந்து விலக்கு வேண்டும் என்றும் அவர் சுங்கச்சாவடி ஊழியர்களிடம் கேட்டுள்ளார்.
அதற்கு அவர்கள் யாராக இருந்தாலும் வரி செலுத்திவிட்டு தான் செல்ல வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். மேலும் வரி விலக்கு கேட்ட ராணுவ அதிகாரியை சுங்கச்சாவடி ஊழியர்கள் சேர்ந்து தாக்கியுள்ளனர்.
இந்த சம்பவம் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது.
#WATCH Dhadhar toll plaza employees in Rajasthan's Churu district thrashed an Army officer. Victim claimed that he was not given toll waiver in spite of presenting Army ID as proof and was instead attacked. pic.twitter.com/U8IDHPFup5
— ANI (@ANI) February 5, 2018