மஹாசிவராத்திரி தினம்: அமைதி நிலவ வேண்டி மணல் சிற்பம் தீட்டிய சுதர்சன் பட்நாயக்
மஹாசிவராத்திரி தினத்தில் அமைதி நிலவ வேண்டி இறைவனை பிராத்திப்போம் என்று மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக் மணல் சிற்பம் ஒன்றை வடிவமைத்துள்ளார்.
புவனேஸ்வர்: மஹாசிவராத்திரி தினத்தை முன்னிட்டு உலகில் அமைதி நிலவ வேண்டும் என வலியுறுத்தி ஒடிஷாவின் பூரி கடற்கறையில் மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக் மணல் சிற்பம் ஒன்றை வடிவமைத்துள்ளார்.
இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான மகா சிவராத்திரி விழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் அனைத்து சிவன் கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன.
சிவராத்திரி அன்று கண் விழித்து விரதமிருந்து இறைவனை வணங்கும்போது முழுமையான இறைவன் அருள் கிடைக்கும் என்பது ஐதீகம். மஹாசிவராத்தி தினத்தை முன்னிட்டு உலகில் அமைதி நிலவ வேண்டும் என்று தனது மனல் சிற்பத்தால் ஒடிஷாவைச் சேர்ந்த மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக் வலியுறுத்தியுள்ளார்.
On #MahaShivaratri , I pray for #peace and happiness for all. My sand art for the pious occasion at #Puribeach in Odisha pic.twitter.com/j9gHT5nBVe
— Sudarsan Pattnaik (@sudarsansand) February 23, 2017
சுதர்சன் பட்நாயக் தனது ட்விட்டர் பக்கத்தில், ஒடிஷா பூரி கடற்கரையில் தான் வடிவமைத்த சிவபெருமானின் மணல் சிற்பம் தொடர்பாக பதிவிட்டுள்ளார். அதில் இந்த நாளில் உலகில் அமைதி நிலவ வேண்டும் என்றும் அனைவரும் எல்லாம் வல்ல இறைவன் சிவபெருமானை பிராத்திப்போம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
My sand art with message "We pray for Peace " on #MahaShivratri at Puri beach in Odisha , pic.twitter.com/IHQCBumkvU
— Sudarsan Pattnaik (@sudarsansand) February 24, 2017