பட்ஜெட்டில் ரயில்வே துறைக்கான அறிவிப்புகள்
டெல்லி: மத்திய பட்ஜெட் 2017 இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அத்துடன் ரயில்வே பட்ஜெட்டும் சேர்த்து தாக்கல் செய்யப்பட்டது.
ரயில்வே துறைக்கு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட அறி்விப்புகள்:
-செலவு, போட்டி, சூழல் ஆகியவற்றை கருத்தில் கொண்டு ரயில் கட்டணங்கள் நிர்ணயிக்கப்படும்
-2017-18ம் ஆண்டில் புதிதாக 25 ரயில் நிலையங்கள் உருவாக்கப்படும்.
-500 ரயில் நிலையங்களில் லிப்டுகள், எஸ்கலேட்டர்கள் அமைக்கப்பட்டு மாற்றுத் திறனாளிகளுக்கு உகந்ததாக மாற்றப்படும்
-2020ம் ஆண்டுக்குள் ஆளில்லா ரயில்வே கேட் இல்லாத நிலை எட்டப்படும்
-பணமற்ற டிக்கெட் பரிவர்த்தனை 58 சதவீதத்திலிருந்து 68 சதவீதமாக உயர்ந்துள்ளது
-மெட்ரோ ரயில் போக்குவரத்து நகர்ப்புறங்களுக்கு முக்கியம்
-புதிய மெட்ரோ ரயில் கொள்கை விரைவில் அறிவிக்கப்படும்
-மெட்ரோ ரயிலுக்காக தனி சட்டம் விரைவில் இயற்றப்படும்
-ரயில்வே துறைக்கு பட்ஜெட்டில் ஒதுக்கப்படும் தொகை ரூ.55000 கோடி
-ஐஆர்சிடிசி இணையத்தளம் மூலம் ரிசர்வ் செய்யப்படும் ரயில் டிக்கெட்டுகளுக்கு சர்வீஸ் சார்ஜ் இல்லை
-விரைவில் புதிய ரயில்வே கொள்கை அறிவிக்கப்படும். அதன் மூலம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் பெருகும்
-ரயில்வே இ-டிக்கெட்டுகளுக்கான சேவை கட்டணம் ரத்து-ஜேட்லி
-பணமற்ற பரிவர்த்தனைக்கு ஊக்கம் தர நடவடிக்கை
-இந்த ஆண்டு 3500 கிமீ தூரத்துக்கு புதிய ரயில் பாதைகள் அமைக்கப்படும்
-2019ல் அனைத்து ரயில் பெட்டிகளிலும் பயோ டாய்லெட்டுகள்
-2000 ரயில் நிலையங்களில் சூரிய மின் சக்தி பயன்படுத்தப்படும்
-ரயில்வே பாதுகாப்புக்காக அடுத்த 5 ஆண்டுகளில் ரூ. 1 லட்சம் கோடி செலவிடப்படும்
-2019ல் 1 கோடி ஊரக வீடுகள் கட்டித் தரப்படும்
2020ம் ஆண்டுக்குள் ஆளில்லா ரயில்வே கேட் இல்லாத நிலை எட்டப்படும்
பணமற்ற டிக்கெட் பரிவர்த்தனை 58 சதவீதத்திலிருந்து 68 சதவீதமாக உயர்ந்துள்ளது
மெட்ரோ ரயில் போக்குவரத்து நகர்ப்புறங்களுக்கு முக்கியம்
புதிய மெட்ரோ ரயில் கொள்கை விரைவில் அறிவிக்கப்படும்
மெட்ரோ ரயிலுக்காக தனி சட்டம் விரைவில் இயற்றப்படும்
-ரயில்வே பாதுகாப்பு திட்டங்களுக்காக 5 வருடங்களுக்கு 1 லட்சம் கோடி ஒதுக்கப்படும்
-நடப்பு நிதியாண்டில் 3500 கி.மீ தூரத்திற்கு புதிய ரயில் பாதைகள் அமைக்கப்படும்
-ரயில்வே பாதுகாப்பு, வளர்ச்சி, தூய்மை, சீர்திருத்தத்திற்கு முன்னுரிமை
-500 ரயில் நிலையங்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்ற வகையில் மாற்றப்படும்
-7000 ரயில் நிலையங்களில் சோலார் மின்சார வசதி செய்யப்படும்