பட்ஜெட் தாக்கலின்போது காமெடி செய்த அருண் ஜேட்லி... நாடாளுமன்றத்தில் நடந்த சுவாரசியம்
பட்ஜெட் தாக்கலின்போது நிதியமைச்சர் அருண் ஜேட்லி நேற்று பட்ஜெட்டு தாக்கல் செய்தா. அப்போது இடைஇடையே அவர் நகைச்சுவையுடன் பேசியது உறுப்பினர்களிடையே சிரிப்பலையே ஏற்படுத்தியது.
டெல்லி: நாடாளுமன்றத்தில் நேற்று பட்ஜெட் தாக்கல் செய்த நிதியமமைச்சர் அவ்வப்போது நகைச்சுவையாக பேசி அவையில் சிரிப்பலையை எழுப்பினார். எதிர்க்கட்சிகளை சாடும் வகையில் கவிதை தொனியிலும் அவர் பேசியது சுவாரசியத்தை ஏற்படுத்தியது.
நாடாளுமன்றத்தில் நேற்று பொது மற்றும் ரயில்வே பட்ஜெட் ஒருகிணைத்து தாக்கல் செய்யப்பட்டது. இதனை நிதியமைச்சர் அருண் ஜேட்லி தாக்கல் செய்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர் இ.அகமது மறைவால் நேற்று அவையை ஒத்திவைக்குமாறு எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன. ஆனால் இதனை ஏற்கமறுத்த சபாநாயகர் சுமித்ரா மகாஜன் பட்ஜெட் தாக்கல் செய்ய அனுமதியளித்தார்.
இறுக்கமான சூழல்
இதனால் அதிருப்தியடைந்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். கடும் அமளிக்கிடையே பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதால் சற்று நேரத்தில் அவையில் இறுக்கமான சூழல் நிலவியது.
ஜேட்லியின் கவிதை
இதனால் பட்ஜெட்டை தாக்கல் செய்த அருண் ஜெட்லி அவ்வப்போது ஹிந்தியில் நகைச்சுவையுடன் பேசியதுடன், கவிதைகளையும் வாசித்தார். பட்ஜெட் குறித்து கவிதையில் குறிப்பிட்ட அருண் ஜெட்லி, "இது காலமாற்றத்தை பிரதிபலிக்கும் பெட்ஜெட், இந்த புள்ளியில் திகைத்துப்போய் நின்றுவிடாதீர்கள். காலத்துடன் கைகோர்த்துச் செல்லுங்கள்". என்று கவிதை மொழியாக பேசினார். இதற்கு பாஜக உறுப்பினர்கள் வரவேற்பு தெரிவித்தனர்.
ஒளி வெளியே வந்துவிட்டது!
மற்றொரு இடத்தில் கருப்புப் பணம் பற்றி குறிப்பிடும்போது, "ஒளி வெளியே வந்துவிட்டது. அது கருப்பையும் வெள்ளையாக்கி கொண்டிருக்கிறது'' என்றார்.
நான் கையைப் பிடித்து அழைத்துச் செல்கிறேன்
இந்த புதிய பாதையில் வர ஏன் பயப்படுகிறீர்கள். வாருங்கள் நான் கையைப் பிடித்து அழைத்துச் செல்கிறேன்" என எதிர்க்ட்சிகளை குறிப்பிட்டு பேசினார். அருண் ஜேட்லியின் இந்த பேச்சு அவையில் சிரிப்பலையை எழுப்பியது.