வங்கி மோசடியாளர்களுக்கு வக்கீலே அருண்ஜேட்லி மகள்தான்... ராகுல் காந்தி 'பொளேர்'
வங்கி மோசடிகள் விவகாரத்தில் அருண்ஜேட்லி மவுனம் காப்பது குறித்து ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
Recommended Video
டெல்லி: வங்கி மோசடிகள் விவகாரத்தில் மத்திய நிதி அமைச்சர் அருண்ஜேட்லி மவுனம் காப்பது ஏன் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13,000 கோடியை சுருட்டிவிட்டு நீரவ் மோடி நாட்டை விட்டு தப்பி ஓடிவிட்டார். இந்த விவகாரத்தில் மத்திய பாஜக அரசை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன.
இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தமது ட்விட்டர் பக்கத்தில், வங்கி முறைகேட்டில் ஈடுபட்ட குற்றவாளிகள் வெளிநாட்டுக்கு தப்பிச் செல்லும் ஒரு மாதத்துக்கு முன்பாக அருண்ஜெட்லியின் மகளான வழக்கறிஞர் தமது சட்ட நிறுவனத்தின் பணிக்காக பெரும் தொகையை பெற்று இருக்கிறார். இதனால்தான் வங்கி மோசடி விவகாரத்தில் அருண்ஜேட்லி மவுனம் காத்து வருகிறார் என்பது தற்போது தெரிய வந்துள்ளது என பதிவிட்டுள்ளார்.
மேலும், அருண்ஜெட்லி மகளின் சட்ட நிறுவனத்தில் சி.பி.ஐ. ஏன் சோதனை நடத்தக்கூடாது? என்றும் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.