For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மத்திய பட்ஜெட் 2017 -18

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: மத்திய நிதி அமைச்சர் அருண்ஜேட்லி 2017-18ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். அதன் விவரம்:

-பட்ஜெட் உரையை நிறைவு செய்தார் அருண் ஜேட்லி

-சுமார் 2 மணி நேரம் பட்ஜெட் உரையாற்றினார் ஜேட்லி

-நாடாளுமன்றம் வெள்ளிக்கிழமைக்கு ஒத்தி வைக்கப்பட்டது

-ரூ. 2.5 லட்சம் முதல் ரூ. 5 லட்சம் வரை ஆண்டு ஊதியம் பெருவோருக்கான வருமான வரி 10%ல் இருந்து 5% ஆக குறைப்பு

-வருமான வரி சலுகையால் அரசுக்கு ரூ.15500 கோடி வருவாய் இழப்பு

-வருவாய் இழப்பை ஈடு செய்ய அதிக ஊதியம் பெறுவோருக்கு அதிக வரி

-ஆண்டு வருவாய் ரூ.50 லட்சம் முதல் ரூ.1 கோடி வரையிலுள்ளவர்களுக்கு கூடுதலாக 10 சதவீத வரி-ஜேட்லி

-தனி நபர் வருமான வரி விலக்கு உச்ச வரம்பில் மாற்றமில்லை

-ரூ.250000 முதல் ரூ.5 லட்சம் வருமானம் ஈட்டுவோருக்கு 5 சதவீத வரி

-தற்போது இந்த பிரிவினருக்கு 10 சதவீத வரி விதிக்கப்பட்டு வருகிறது

-தனி நபர் வருமான வரி கணக்கு தாக்கல் படிவம் இனி ஒரே பக்கமாக இருக்கும்

-அரசியல் கட்சிகளின் வெளிப்படைத்தன்மையை பாதுகாக்க ஜேட்லி அதிரடி அறிவிப்பு

-அரசியல் கட்சிகள் அதிகபட்சமாக ஒரு மூலத்திடமிருந்து ரூ.2000 மட்டுமே நன்கொடை பெற முடியும்

-அரசியல் கட்சிகள் நன்கொடையை டிஜிட்டல் முறை அல்லது காசோலையில்தான் பெற வேண்டும்

-ரிசர்வ் வங்கி சட்டத்தில் மாற்றம் செய்யப்படும்

-கருப்பு பணத்தை ஒழிக்க இந்த நடவடிக்கை

-அனைத்து நிபந்தனைகளையும் பூர்த்தி செய்தால்தான் அரசியல் கட்சிகளுக்கு வருமான வரியில் விலக்கு

-ரொக்கமாக ரூ. 3 லட்சத்துக்கு மேல் வங்கிகளில் பணம் எடுக்க தடை

-ஊழலுக்கு எதிரான சிறப்பு விசாரணை குழு இப்பரிந்துரையை செய்தது

-இந்த பரிந்துரையை அரசு ஏற்கிறது; இதற்காக வருமான வரி சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்படும்

-2015-16ல் மொத்த வரி வருவாய் 17 சதவீதம் அதிகரித்துள்ளது

-ரூ. 50 கோடி வரை ஆண்டு வருவாய் உள்ள நிறுவனங்களுகக்கான வருமான வரி 30%ல் இருந்து 25% ஆக குறைக்கப்படும்

-ஆண்டுக்கு 50 கோடிக்கு குறைவாக வர்த்தகம் நடைபெறும் சிறு நிறுவனங்களுக்கு 5 சதவீத வரி குறைப்பு

-6.94 லட்சம் நிறுவனங்கள் வருமான வரி செலுத்துகின்றன

-இதில் 96 சதவீத நிறுவனங்கள் சிறு நிறுவனங்கள்தான்

-சிறு நிறுவனங்கள் வளர்ச்சிக்கு வரி குறைப்பு உதவும்

-கடந்த ஆண்டில் வருமான வரி கணக்கு தாக்கல் செய்தவர்கள் 3.7 கோடி பேர் மட்டுமே. இதில் ஆண்டு வருமானத்தை ரூ. 10 லட்சத்துக்கு அதிகமாக காட்டியவர்கள் 24 லட்சம் பேர் தான்

-கடந்த ஆண்டில் வருமான வரி கணக்கு தாக்கல் செய்தவர்கள் 3.7 கோடி பேர் மட்டுமே. இதில் ஆண்டு வருமானத்தை ரூ. 10 லட்சத்துக்கு அதிகமாக காட்டியவர்கள் 24 லட்சம் பேர் தான்

-பண மதிப்பிழப்பால் அட்வான்ஸ் வருமான வரி கட்டுவது 34.8% அதிகரித்துள்ளது

-இந்தியாவில் வரி செலுத்துவோர் எண்ணிக்கை குறைவாக உள்ளது

-3.7 கோடி தனி நபர்களில் வருமான வரி தாக்கல் செய்தோர் 97 லட்சம் பேர் குறைந்த வருவாய் பிரிவினர்

-52 லட்சம் பேர் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை வருவாய் ஈட்டுகிறார்கள்

-1.72 லட்சம் பேர் மட்டுமே 50 லட்சத்துக்கு மேல் வருவாய் பெறுவதாக அறிவித்துள்ளனர்

-பணமதிப்பிழப்புக்கு பிறகு இந்த வரி ஏய்ப்பு அம்பலமானது

-1.09 கோடி வங்கி கணக்குகளில் டெபாசிட் செய்யப்பட்ட பழைய ரூபாய் நோட்டுக்கள் சராசரி மதிப்பு 5.3 லட்சம்

-8 லட்சத்துக்கு மேல் 1.48 லட்சம் வங்கி கணக்குகளில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது

-நாட்டில் பெரும்பாலானவர்கள் வருமான வரியே கட்டுவதில்லை. இதனால் நியமாயமாக வரி கட்டுவோர் மீது சுமை கூடுகிறது

-2017-18ல் நாட்டின் நிதிப் பற்றாக்குறை 3.2 சதவீதமாக இருக்கும்

-கடந்த ஆண்டில் மாநில அரசுகளுக்கு மத்திய அரசு ஒதுக்கிய நிததி ரூ. 4.11 லட்சம் கோடி

-பாதுகாப்புத்துறைக்கான நிதி ஒதுக்கீடு ரூ. 2.74 லட்சம் கோடியாக உயர்த்தப்படும்

-2017-18ம் ஆண்டு பட்ஜெட்டில் மொத்த செலவீனங்கள் ரூ. 21.47 லட்சம் கோடியாக இருக்கும்

-மொத்த உற்பத்தியில் நிதி பற்றாக்குறை 3.2 சதவீதமாக இருக்கும்-ஜேட்லி

-தலைமை தபால் நிலையங்கள் பாஸ்புக் அலுவலக பணிகளையும் மேற்கொள்ளும்

-பாதுகாப்பு படையினர் போக்குவரத்து டிக்கெட் எடுக்க தனி வசதி ஏற்படுத்தப்படும்

-மத்திய எண்ணெய் நிறுவனங்களை ஒருங்கிணைத்து மாபெரும் பொதுத்துறை நிறுவனத்தை உருவாக்க திட்டம்

-பல்கலைக்கழக மானிய குழுவில் மாற்றம் கொண்டுவரப்படும்

-வெளிநாடுகளுக்கு தப்பியோடி தலைமறைவாக இருக்கும் குற்றவாளிகள் சொத்துக்கள் முடக்கப்படும்

-குற்றவாளிகள் சொத்துக்களை முடக்க சட்டத்திருத்தம், தேவைப்பட்டால் புது சட்டம்-ஜேட்லி

-ராணுவத்திற்கான நிதி ஒதுக்கீடு ரூ.2லட்சத்து 74 ஆயிரத்து 114 கோடி-ஜேட்லி

-இதில் ராணுவ ஓய்வூதிய செலவீனங்கள் சேர்க்கப்படவில்லை-ஜேட்லி

-வறட்சியை சமாளிக்க புதிதாக 5 லட்சம் குளங்கள் வெட்டப்படும்

-செக் மோசடிகளை தவிர்க்க மாற்றுமுறை ஆவணச் சட்டத்தில் திருத்தம்

-உர விற்பனை நிலையங்கள், கல்வி நிறுவனங்களில் டிஜிட்டல் பரிவர்த்தனை

-ஆதார் அடிப்படையிலான பண பரிவர்த்தனை திட்டம் அறிமுகம்

-மொபைல் வாலட், டெபிட் கார்டுகள் இல்லாதவர்களுக்காக இத்திட்டம்

-இந்த நிதியாண்டில் 2500 கோடி டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு இலக்கு

-பிரதமர் மோடியின் குஜராத் மற்றும் ஜார்க்கண்டில் புதிதாக 2 எய்ம்ஸ் மருத்துவமனைகள் அமைக்கப்படும்

-தேசிய நெடுஞ்சாலைகள் திட்டத்துக்கு ரூ. 64,000 கோடி ஒதுக்கீடு

-புதிய அன்னிய முதலீட்டுக் கொள்கை கொண்டு வரப்படும்

-போக்குவரத்து துறைக்கான பட்ஜெட் ஒதுக்கீடு ரூ.2,41,387 கோடி

-நாட்டின் அடிப்படை கட்டமைப்பு வசதிகளுக்கு ரூ. 3,96,135 கோடி செலவிடப்படும்

-உள்கட்டமைப்பு துறைக்கான மொத்த ஒதுக்கீடு ரூ.3,96,135 கோடி

-100 திறன் மேம்பாட்டு மையங்கள் நாடு முழுவதும் அமைக்கப்படும் - அருண் ஜேட்லி

-மூத்த குடிமக்களுக்கு 8% வருவாயுடன் எல்.ஐ.சி திட்டம் - அருண் ஜேட்லி

-மருத்துவ மேற்படிப்புகளில் 5000 சீட்கள் அதிகரிக்கப்படும்

-அன்னிய முதலீடு வளர்ச்சி வாரியம் (Foreign Investment Promotion Board) மூடப்படும்

-கிராம பஞ்சாயத்துகளுக்கு பிராண்ட் பேண்ட் இண்டர்நெட் வசதிகள் செய்து தரப்படும்

-அதிவிரைவு பிராட்பேண்ட் இணைப்புக்காக 10 ஆயிரம் கோடி ஒதுக்கப்படும்

-150000 கிராமங்களுக்கு அடுத்த ஆண்டுக்குள் பிராட்பேண்ட் வசதி கிடைக்கும்

-எலக்ட்ரானிக் பொருள் உற்பத்தி மையமாக இந்தியா மாற்றப்படும்

-எலக்ட்ரானிக் துறைக்கு ரூ.745 கோடி ஒதுக்கீடு

-நாட்டின் அடிப்படை கட்டமைப்பு வசதிகளுக்கு ரூ. 3,96,135 கோடி செலவிடப்படும்

-அன்னிய முதலீடுகள் 36% அதிகரித்துள்ளது. 361 பில்லியன் டாலர்கள் கையிருப்பு

-2019க்குள் அனைத்து ரயில்கள் கழிவறைகளும் பயோ டாய்லெட்டாக மாற்றப்படும்

-மூத்த குடிமக்கள் ஆரோக்கிய மேம்பாட்டுக்காக ஆதார் அட்டை அடிப்படையில் ஸ்மார்ட் கார்டு

-முதல்கட்டமாக இந்த திட்டம் 15 மாவட்டங்களில் அறிமுகம் செய்யப்படும்

-தாழ்த்தப்பட்டோருக்கான நிதி ஒதுக்கீடு ரூ.38 838 கோடியிலிருந்து ரூ.52393 கோடியாக உயர்வு-ஜேட்லி

-மருத்துவ உபகரணங்கள் துறையில் முதலீடு ஈர்க்கப்படும்

-மருத்துவ உபகரண விலை குறைக்க நடவடிக்கை

-தொழிலாளர் நலனை காக்க அரசு நடவடிக்கை எடுக்கும்

-குஜராத் ஜார்கண்டில் புதிதாக எய்ம்ஸ் மருத்துவமனை மையங்கள்

-கிராமப்புற பெண்கள் மேம்பாட்டுக்கு ரூ.500 கோடி சிறப்பு நிதி

-பயிர் காப்பீட்டு 30 சதவீதத்தில் இருந்து 50 சதவீதமாக விரிவு படுத்தப்படும் : அருண் ஜேட்லி

-பிரதமரின் வீடு கட்டும் திட்டத்திற்கு ரூ.13 ஆயிரம் கோடி: ஜேட்லி

-உயர் கல்வி நுழைவு தேர்வு நடத்துவதற்காக தேசிய டெஸ்டிங் ஏஜென்சி தொடங்கப்படும்-ஜேட்லி

-உயர் கல்விக்கான நுழைவுத் தேர்வுகளை நடத்த தனி அமைப்பு

-நுழைவுத் தேர்வுகளை இனி சிபிஎஸ்இ நடத்தாது

-நாட்டில் 2019ஆம் ஆண்டுக்குள் 50,000 கிராம பஞ்சாயத்துகளில் ஏழ்மை முழுதாக நீக்கப்படும்: ஜேட்லி

-2018 மே 1ம் தேதிக்குள் அனைத்து கிராமங்களிலும் மின்வசதி

-கிராமப்புற வளர்ச்சிக்கு ரூ.187223 கோடி ஒதுக்கீடு

-கடந்த பட்ஜெட்டை ஒப்பிட்டால், இது 24 சதவீத உயர்வு-ஜேட்லி

-1 கோடி குடும்பங்களை வறுமையிலிருந்து நீக்க இலக்கு

-2018 மே 1ம் தேதிக்குள் அனைத்து கிராமங்களுக்கும் மின்சார வசதி வழங்கப்படும்

-கிராமப்புறங்களில் நாள்தோறும் 133 கி.மீ சாலை அமைக்க இலக்கு

-ஊரக வேலை வாய்ப்பு திட்டத்திற்கு சாதனை அளவாக ரூ.48000 கோடி ஒதுக்கீடு

-விவசாயிகளுக்கு 60 நாள் வட்டி தள்ளுபடி

-பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் வங்கிகள் அதிக அளவு கடன் வழங்க முடியும்

-பயிர் காப்பீடு திட்டத்திற்காக ரூ.13000 கோடி ஒதுக்கீடு-ஜேட்லி

-கடந்த ஆண்டு பயிர் காப்பீடுக்கு ஒதுக்கப்பட்ட தொகை ரூ.5500 கோடியாக இருந்தது-ஜேட்லி

-விவசாய உற்பத்தி வளர்ச்சி இவ்வாண்டில் 4.1 சதவீதமாக இருக்கும்-ஜேட்லி

-2017-18ல் விவசாயிகளுக்கு இதுவரை இல்லாத சாதனையாக 10 லட்சம் கோடி கடன் வழங்க முடிவு-ஜேட்லி

-நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2017-18ல் 7.7 சதவீதம் அதிகரிக்கும்

-அமெரிக்காவின் நிதிக்கொள்கையால் வளரும் நாடுகள் பாதிக்கப்பட வாய்ப்பு: அருண் ஜெட்லி

Arun Jailtey- Union Budget 2017 live updates

-விவசாயிகள் வருமானம் இரட்டை மடங்காக்கப்படும்-ஜேட்லி

-கிராமங்களில் அடிப்படை கட்டமைப்பு மேம்படுத்தப்படும்

-இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கப்படும்

-ஏழைகளுக்கு வீட்டு வசதி திட்டம் செயல்படுத்தப்படும்

-டிஜிட்டல் பொருளாதாரம் வளர்க்கப்படும்-ஜேட்லி

-வரி வசூல் நேர்மையானதாக இருக்கும்-ஜேட்லி

-வங்கிகளின் கடன் வட்டி விகிதத்தை குறைக்கப்படும்

-உலக பொருளாதாரத்தின் இன்ஜினாக உள்ளது இந்தியா-ஜேட்லி

-ஊரக வளர்ச்சிக்கு அதிக நிதி செலவிடப்படும்

-வறுமை நீக்கம், அடிப்படை கட்டமைப்பு வசதிகளுக்கு முக்கியத்துவம் தரப்படும்

-வேலை வாய்ப்பை உருவாக்குவதே மத்திய அரசின் முக்கிய நோக்கம்- ஜேட்லி

-பண மதிப்பிழப்பு நடவடிக்கை பலன் படிப்படியாக கிடைக்கும்-ஜேட்லி

-பண வீக்கம் 3.4 என்ற அளவில் குறைந்துள்ளது-ஜேட்லி

-பணவீக்கம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது

-வளர்ந்த நாடுகளின் வளர்ச்சி இந்த ஆண்டு 1.6%-1.9% ஆக இருக்கும்

-வளரும் நாடுகளின் வளர்ச்சி 4.1%-4.5% ஆக இருக்கும்

-உலக அளவில் நாடுகளின் சராசரி வளர்ச்சி 3.4% ஆக இருக்கும்

-ஜி.எஸ்.டி வரி விதிப்புக்கு ஆதரவு அளித்த கட்சிகளுக்கு நன்றி-ஜேட்லி

-பண மதிப்பிழப்பு என்பது தைரியமான முடிவு-ஜேட்லி

-உலக வர்த்தக வர்த்தகத்தின் என்ஜினாக இந்தியா விளங்குகிறது- ஜேட்லி

-அடுத்த ஆண்டில் இந்தியாவின் பொருளாதாக வளர்ச்சி விகிதம் அதிகரிக்கும்

-கருப்புப் பணத்துக்கு எதிரான நடவடிக்கைகள் தீவிரம்

-வேலைவாய்ப்புகளை உருவாக்குவதும், இளைஞர்களுக்கு அதிக பலன்கள் போய் சேர செய்வதும் மத்திய அரசின் திட்டம்

-எதிர்க் கட்சிகளின் அமளிக்கு இடையே பட்ஜெட் தாக்கல் செய்து கொண்டுள்ளார் அருண் ஜேட்லி

-ஏழைகள், விவசாயிகள் நலனுக்கான திட்டங்கள் தொடரும்-ஜேட்லி

Arun Jailtey- Union Budget 2017 live updates
English summary
Finance Minister Arun Jaitely will present Union Budget 2017-18 in Lok Sabha. Get live updates on Budget 2017 in tamil, along with key highlights and announcements.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X