2ஜி வழக்கில் சிபிஐ உள்நோக்கத்துடன் திட்டமிட்டே குழப்பியதா? கேஜ்ரிவால் சந்தேகம்
ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் சிபிஐ உள்நோக்கத்துடன் திட்டமிட்டே குழப்பியதா? என டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் சந்தேகம் எழுப்பியுள்ளார்.
டெல்லி: ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கில் சிபிஐ வேண்டும் என்றே உள்நோக்கத்துடன் திட்டமிட்டே குழப்பியதா? என டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஸ்பெக்ட்ரம் வழக்கில் இருந்து முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசா, கனிமொழி எம்.பி. உள்ளிட்டோர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு குறித்து டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
2ஜி ஊழல் என்பது இந்தியாவின் மிகப்பெரிய ஊழல்களில் ஒன்று. நாட்டையே உலுக்கிய இந்த ஊழல்தான் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கம் வீழ்ச்சியடைவதற்கான காரணங்களில் ஒன்றாக இருந்தது.
2G scam is one of the biggest scams. It rocked the country n was one of the reasons for UPA’s downfall. Today everyone goes scot free. Did CBI mess up the case? Intentionally? People need answers
— Arvind Kejriwal (@ArvindKejriwal) December 21, 2017
இன்று குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் விடுதலையாகிவிட்டனர். சி.பி.ஐ உள்நோக்கத்துடன் திட்டமிட்டே இந்த வழக்கை குழப்பியுள்ளதோ? மக்களுக்கு பதில் வேண்டும்.
இவ்வாறு கேஜ்ரிவால் கேள்வி எழுப்பியுள்ளார்.