ஓசியில் வந்தாலும் என் வீட்டில் 'ஏ.சி.' வேண்டாம்: கெஜ்ரிவால் அடம்
டெல்லி: தனக்கு அளிக்கப்பட்டுள்ள பங்களாவில் இருக்கும் ஏ.சி.களை நீக்குமாறு அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அவருக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் 5 படுக்கையறைகள் கொண்ட பங்களாவில் விரைவில் குடியேறுகிறார். இந்நிலையில் அந்த பங்களாவில் உள்ள ஏ.சி.களை அகற்றுமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஏ.சி.களை அகற்றினால் சுவர்களில் ஓட்டை இருக்கும். பின்னர் அவற்றை அடைக்க கூடுதல் வேலை செய்ய வேண்டும். அதனால் உங்களுக்கு ஏ.சி. வேண்டாம் என்றால் பயன்படுத்தாதீர்கள் என்று பொதுப்பணித்துறை கெஜ்ரிவாலிடம் தெரிவித்துள்ளது.
இது குறித்து மூத்த பொதுப் பணித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில்,
ஏ,சி.களை அகற்றுவது என்பது வீட்டை மறுசீரமைப்பது ஆகும். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக காலியாக கிடந்த வீட்டை சுத்தம் செய்து பெயிண்ட் அடித்துள்ளோம் என்றார்.
முன்பு டெல்லி முதல்வரான போது கெஜ்ரிவால் தான் தங்கியிருந்த வீட்டில் இருந்த ஏ.சி.யை பயன்படுத்தவே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.