குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிர்ப்பு- அஸ்ஸாமில் லட்சக்கணக்கானோர் திரண்ட பிரமாண்ட பேரணி
திப்ரூகர்: மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அஸ்ஸாமின் திப்ரூகரில் லட்சக்கணக்கானோர் ஒன்று திரண்டு அமைதிப் பேரணியை நடத்தினர்.
குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராக முதன் முதலாக அஸ்ஸாமில்தான் போராட்டம் வெடித்தது. இப்போராட்டங்கள் வன்முறையாக வெடித்து துப்பாக்கிச் சூடுகளால் உயிரிழப்புகள் ஏற்பபட்டன.
இதனை தொடர்ந்து மேற்கு வங்கம், பீகார், டெல்லி, உத்தரப்பிரதேசம் என வட இந்தியா முழுவதும் போராட்டங்கள் வெடித்தன. பின்னர் தமிழகம் உள்ளிட்டட தென்னிந்திய மாநிலங்களும் போராட்டத்தில் இணைந்து கொண்டன.
Massive protest against C(A)A in Dibrugarh, Assam.
— Abhinab Chetia (@jonak8) December 24, 2019
We don't want illegal immigrants irrespective of their religion. #ScrapCAA #IndiaAgainstCAA #AssamAgainstCAA pic.twitter.com/MbgBDJO6Nm
தற்போது நாள்தோறும் நாடு முழுவதும் இச்சட்ட திருத்தத்துக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அஸ்ஸாமின் திப்ரூகரில் லட்சக்கணக்கானோர் ஒன்று திரண்ட அமைதிப் போராட்டம் நேற்று நடைபெற்றது.
#CAA_NRCProtests Today in Dibrugarh Assam..Its a scene from every Town of Assam..United against CAA. pic.twitter.com/Ef41wVYf1c
— The Hitman অসমীয়া (@TheHitm07855496) December 24, 2019
அனைத்து அஸ்ஸாம் மாணவர் ஒன்றியத்தின் அழைப்பின் பேரில் இந்த அமைதிப் பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதேபோல் அஸ்ஸாமின் தேஸ்பூர், டெர்கோன், கோல்காட் ஆகிய இடங்களிலும் அமைதிப் பேரணி நடைபெற்றது.