அஸ்ஸாமில் 70% வாக்குகள் பதிவு- வன்முறையில் போலீஸ்காரர் பலி- துப்பாக்கிச் சூடு!!
குவஹாத்தி: அஸ்ஸாம் மாநிலத்தில் மூன்றாவது மற்றும் இறுதி கட்டமாக 6 தொகுதிகளில் நடைபெற்ற தேர்தலில் 70%க்கும் அதிகமான வாக்குகள் பதிவாகி உள்ளன. இங்கு பிரதமர் மன்மோகன்சிங் மனைவியுடன் வந்து இன்று வாக்களித்தார். மேலும் இன்று நடைபெற்ற வன்முறை சம்பவத்தில் போலீஸ்காரர் ஒருவர் பலியாகி உள்ளார்.
அஸ்ஸாம் மாநிலத்தில் இன்று 6 தொகுதிகளுக்கு வாக்குப் பதிவு நடைபெற்றது. மொத்தம் 74 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர்.
இன்று காலை முதலே வாக்காளர்கள் ஆர்வத்துடன் வாக்களித்தனர். அஸ்ஸாம் மாநிலத்தின் திஸ்பூரில் பிரதமர் மன்மோகன்சிங், அவரது மனைவி குர்சரன் கவுர் ஆகியோர் வாக்களித்தனர்.
அஸ்ஸாமில் உள்ள 14 தொகுதிகளில் 8 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இரண்டு கட்டமாக ஏற்கெனவே நடைபெற்று முடிவடைந்தது. அதில் 78% சதவீத வாக்குகள் பதிவானது.
இன்று வாக்குப் பதிவு முடிவடையும் நேரத்தில் சுமார் 70%க்கும் அதிகமான வாக்குகள் பதிவாகி இருந்தன.
கலவரம்- போலீஸ்காரர் பலி
அசாமில் கோக்ராஜ்கர் பகுதியில் வாக்குப் பதிவின் போது வன்முறை வெடித்தது. இதில் ஒரு போலீஸ்காரர் பலியானார். இதைத் தொடர்ந்து எல்லைப் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். தொடர்ந்தும் அங்கு பதற்றமான ஏற்பட்டது.