கொலை மிரட்டல் எதிரொலி.. மோடிக்கு எஸ்பிஜி பாதுகாப்பு அதிகரிப்பு.. யார் இவர்கள்?
பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து அவருக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
Recommended Video
டெல்லி: பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து அவருக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
அவர் இனி அறிவிக்கப்படாத சாலை பிரச்சாரங்கள் செய்ய கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. நேற்று டெல்லியில் கைப்பற்றப்பட்ட கடிதத்தில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட பாணியில் பிரதமர் நரேந்திர மோடியை கொல்வதற்கு மாவோயிஸ்டுகள் சதித் திட்டம் தீட்டியிருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டது.
புனே போலீசார் நடத்திய விசாரணையில் இந்த தகவல் வெளியானது. அந்த கடிதத்தில் மோடிக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது.
மிரட்டல்
மாவோயிஸ்ட் இயக்கம் இதில் தொடர்பில் இருப்பதாக கூறப்பட்டது. மோடியின் இந்துத்துவா அரசியலுக்கு எதிராக இந்த கொலையை செய்ய வேண்டும் என்று கூறப்பட்டது. இதில் தொடர்புடைய நான்கு பேர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர். போலீஸ் இதை தீவிரமாக விசாரித்து வருகிறது.
சாலை பயணம்
இந்த கொலைமிரட்டலை அடுத்து பிரதமர் மோடியின் சாலை பயணங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதேபோல் சாலையில் காரில் நின்றபடி மோடி பேசும் நிகழ்வுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேடையில் மட்டும், அதிகபட்ச பாதுகாப்புடன் மோடி பேசுவார் என்று கூறப்படுகிறது. நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் இந்த முறையே கடைப்பிடிக்கப்பட உள்ளது.
எஸ்பிஜி பாதுகாப்பு
எஸ்பிஜி ஆங்கிலத்தில் சொல்லப்படும் இந்த பாதுகாப்பு படை பிரதமர் மோடிக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. மற்ற பெரிய தலைவர்களுக்கு இதே போன்று கருப்பு பாதுகாப்பு படை வழங்கப்படுகிறது. இந்த படையின் அளவு தற்போது அதிகரிக்கப்பட்டுள்ளது. எப்போதும் இருக்கும் எஸ்பிஜி படை வீரர்களை விட இனி அதிக வீரர்கள் மோடிக்கு பாதுகாப்பாக இருப்பார்கள்.
யார்
எஸ்பிஜி என்றால் ஸ்பெஷல் ப்ரொடெக்சன் கார்ட், தமிழில் இவர்களை சிறப்பு பாதுகாப்பு படை என்று அழைப்பார்கள். மிகவும் திறமை பெற்ற இவர்களுக்கு பல துறைகளில் பயிற்சி அளிக்கப்பட்டு இருக்கும். பெரிய தீவிரவாத தாக்குதல்களில் இருந்து, தலைவர்களை எப்படி பாதுகாப்பது என்று இவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு இருக்கும். இவர்கள் எப்போதும் மோடியை சுற்றி வட்டமிட்டு இருப்பார்கள்.