வயதோ 84 வாங்கிய தங்கப்பதக்கமோ 54... தடகளத்தில் கலக்கும் ராஜஸ்தான் முதியவர்
ராஜஸ்தான் மாநிலத்தின் ஆல்வார் பகுதியில் உள்ள சரங்பூர் கிராமத்தைச் சேர்ந்த தவ்லத் ராம் 100, 200, 400 மீட்டர் என பல்வேறு ஓட்டப்பந்தயப் போட்டிகளில் பங்கேற்று சாதனை படைத்துள்ளார்.
இவர், சமீபத்தில் ஆல்வாரில் நடைபெற்ற "யுவராணி ஓட்டப்பந்தயப் போட்டி"யில் கலந்து கொண்டு ஷாட்புட், ஜாவ்லின் த்ரோ, ஒட்டப்பந்தயம் மற்றும் டிஸ்கஸ் த்ரோ ஆகிய நான்கு போட்டிகளுக்கான தங்கப்பதக்கத்தை வென்று சாதனை படைத்துள்ளார்.
24 வருடங்களுக்கு முன் பாபா பூர்ணாணந்தாவின் நினைவாக நடத்தப்பட்ட ஓட்டப்பந்தயங்களில் கலந்துகொள்ளுமாறு தன்னை இளைஞர் ஒருவர் ஊக்குவித்ததாக கூறிய தவ்லத் ராம், தனது மனைவியும் பந்தயங்களில் கலந்து கொள்ள வற்புறுத்தியதாக கூறியுள்ளார்.
முதலில் தயங்கிய தான், பின்னர் துணிச்சலுடன் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றதாக தெரிவித்தார். அப்போது உலகத்தை வென்றதாக தனக்கு தோன்றியதாக அவர் தெரிவித்துள்ளார். அன்று முதல் இன்று வரை அந்த இளைஞரையே தனது குருவாக பாவித்து வருவதாக அந்த முதியவர் மேலும் கூறினார்.