ஆந்திர மாநிலம் கர்னூல் கல்குவாரியில் பயங்கர வெடி விபத்து.. 15 பேர் உடல்சிதறி பலி
ஆந்திர மாநிலம் கர்னூலில் குவாரியில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 15 பேர் உயிரிழந்துள்ளனர்.
Recommended Video
ஹைதராபாத்: ஆந்திர மாநிலம் கர்னூலில் குவாரியில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 15 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஆந்திர மாநிலம் கர்னூலில் கல்குவாரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு வெளி மாநிலங்களை சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்றிரவு இங்கு பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 15 தொழிலாளர்கள் உடல் சிதறி உயிரிழந்தனர்.
உயிரிழந்த அனைவரும் ஒடிசாவை சேர்ந்த தொழிலாளர்கள் என தெரியவந்துள்ளது. குவாரி வெடிவிபத்தில் மேலும் 5 பேர் காயமடைந்துள்ளனர்.
இந்த விபத்தில் 3 டிராக்டர், ஒரு லாரி தீயில் எரிந்து சேதமடைந்துள்ளது. அதிக அளவு டெட்டனேட்டர், ஜெலட்டின் குச்சிகளை பயன்படுத்தியது விபத்துக்கு காரணம் என தெரியவந்துள்ளது.
வெடிவிபத்தின் காரணமாக அப்பகுதியைச் சுற்றியுள்ள 50க்கும் மேற்பட்ட வீடுகளில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.