டெல்லியில் மீண்டும் ஏடிஎம்-இல் 2000 ரூபாய் போலி நோட்டுக்கள்
டெல்லியில் மேலும் ஒரு வங்கி ஏ.டி.எம் -இல் குழந்தைகள் விளையாடப் பயன்படுத்தும் போலி ரூபாய் நோட்டுக்கள் வைக்கப்பட்ட சம்பவம் வங்கி வாடிக்கையாளர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி : டெல்லியில் மேலும் ஒரு வங்கி ஏ.டி.எம் -ல் குழந்தைகள் விளையாடப் பயன்படுத்தும் போலி ரூபாய் நோட்டுக்கள் வைக்கப்பட்ட சம்பவம் வங்கி வாடிக்கையாளர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியின் சங்கம் விகார் பகுதியில் உள்ள எஸ்பிஐ வங்கி ஏடிஎம்யிலிருந்து கடந்த மாதம் 6-ம் தேதி குழந்தைகள் விளையாடப் பயன்படுத்தும் போலி 2 ஆயிரம் நோட்டுக்கள் இருந்தது பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியது.
இதனைத் தொடர்ந்து, நிதி அமைச்சகம் இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ள உத்தரவிட்டது. அதன்படி எஸ்பிஐ ஏடிஎம்-இல் 2 ஆயிரம் ரூபாய் போலி நோட்டுக்கள் வைக்கப்பட்ட நபர் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் நேற்று டெல்லியில் உள்ள அமர் காலனியில் உள்ள தனியார் வங்கி ஏடிஎம் ஒன்றில், குழந்தைகள் பேங்க் ஆப் இந்தியா என அச்சிடப்பட்ட 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் வந்துள்ளது.இந்த சம்பவம் குறித்து டெல்லி குற்றப்பிரிவு போலீசார் வசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஏடிஎம்களில் தொடர்ந்து 2 ஆயிரம் ரூபாய் போலி நோட்டுக்கள் வருவது தொடர்கதையாகி இருப்பதால் பணம் எடுக்கும் வாடிக்கையாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.