For Daily Alerts
Just In
ஏடிஎம் மிஷின்களில் ரூ.2000 நோட்டுக்கள் எப்போது கிடைக்கும்? மத்திய அரசு விளக்கம்
ஏடிஎம் மின்ஷிகளில் மாற்றம் செய்த பிறகே 2 000 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை பெற முடியும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
டெல்லி: டெல்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த மத்திய நிதித்துறை செயலாளர் சக்திகாந்த தாஸ் ஏடிஎம் மின்ஷின்களில் சில மாற்றங்களை செய்ததால் தான் 2 ஆயிரம் ரூபாய் நோட்டு வரும் என தெரிவித்தார்.
ஏடிஎம் மிஷின்களில் சில தொழில்நுட்ப மேம்பாடு செய்ய வேண்டும் என்று கூறிய சக்திகாந்த தாஸ் அதனை செய்த பிறகே புதிய 2000 ரூபாய் நோட்டை பெற முடியும் என கூறினார்.
அதுவரை வங்கிகளில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை பெற்றுக்கொள்ளலாம் எனக்கூறினார்.
2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளின் பயன்பாடு தொடர்ந்து கண்காணிக்கப்படும் என்றும் சக்திகாந்த தாஸ்
வித்தார்.
புதிய ரூபாய் நோட்டுகளுக்கு ஏற்ப மாற்றும் வரை ஏடிஎம் மிஷின்களில் 100 நோட்டுகள் தான் வரும் என்றும் மத்திய நிதித்துறை செயலாளர் சக்திகாந்த தாஸ் கூறினார்.
Comments
English summary
ATM machines to reform for new currency notes said economic affairs secretary shaktikanta das
Story first published: Thursday, November 10, 2016, 16:06 [IST]