மோடி தியானம் செய்த 'சொகுசு' குகையில் அடேங்கப்பா ஏற்பாடுகள்!
Recommended Video
கேதார்நாத்: பிரதமர் நரேந்திர மோடி 18 மணிநேரம் தியானம் செய்ததாக கூறப்படும் கேதார்நாத் குகையில் சொகுசு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
மோடியின் கேதார்நாத் பயணம் சர்ச்சைக்குரியதாக வெடித்திருக்கிறது. மோடிக்கு கேதார்நாத் கோவிலில் சிவப்பு கம்பள வரவேற்பு கொடுக்கப்பட்டது.
அனைவரும் வழிபாடு நடத்தும் கோவிலில் மோடிக்கு மட்டும் சிவப்பு கம்பள வரவேற்பா? என விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து மோடி 18 மணிநேரம் தியானம் செய்த விவகாரமும் விவாதப் பொருளாகி உள்ளது.
மோடியின் தியானத்துக்காக முன்கூட்டியே சொகுசு வசதிகள் குகைகள் செய்யப்பட்டதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குகைக்குள்ளே கழிவறை, காற்றோட்டத்துக்கான ஜன்னல்கள் அமைக்கப்பட்டனவாம்.
பிரஸ் மீட்டில் வந்த சிக்னல்.. ஓரம்கட்டப்படும் மோடி.. பிரதமர் பதவிக்கு அடிபோடும் அமித் ஷா?
மேலும் குகைக்குள் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு அதை கமாண்டோ படையினர் வெளியில் இருந்து கண்காணித்தும் வந்துள்ளனர். தலையணை, மெத்தையுடன் மோடி தியானம் இருந்தது விமர்சிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் சொகுசு வசதிகளும் அமைக்கப்பட்டிருந்த தகவல் கூடுதல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.