For Daily Alerts
Just In
பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்துங்க: மோடி அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை!
மும்பை: ஜம்மு காஷ்மீர் எல்லையில் தொடர்ச்சியாக தாக்குதல் நடத்தி வரும் பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்று பாஜகவின் கூட்டணிக் கட்சியான சிவசேனா வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக சிவசேனாவின் நாளேடான சாம்னாவில் அக்கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே எழுதி இருப்பதாவது:
- ஜம்மு காஷ்மீரில் 13 எல்லை கிராமங்கள் மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்தி உள்ளது.
- 22 இந்திய நிலைகள் மீதும் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தி இருக்கிரது.
- 2003ஆம் ஆண்டுக்குப் பின்னர் மிகப் பெரிய தாக்குதலாக இது கருதப்பட வேண்டும்.
- இந்த பகுதிகள் மீது ஒரு மாத காலத்தில் 25 முறை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
- பாகிஸ்தான் தாக்குதலைக் கண்டுகொள்ளாமல் மவுனமாக நாம் இருக்கக் கூடாது.
- காஷ்மீர் பிரிவினைவாத இயக்கத் தலைவர்களுடன் பாகிஸ்தான் தூதர் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கக் கூடாது.
- பாகிஸ்தான் தூதரின் நடவடிக்கையால் பேச்சுவார்த்தையை நிறுத்தியது மட்டும் போதுமான நடவடிக்கை அல்ல.
- எல்லையில் மிகப் பெரிய சுரங்கம் அமைத்து தீவிரவாதிகள் ஊடுருவியிருப்பதை ராணுவம் கண்டுபிடித்துள்ளது.
- பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்து நாம் தாக்குதல் நடத்தி மண்டியிடச் செய்ய வேண்டும்.
- பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்த வேண்டும் என்பதுதான் நமது நாட்டு மக்களின் எதிர்பார்ப்பு.
Comments
English summary
Shiv Sena chief Uddhav Thackeray Monday urged Prime Minister Narendra Modi to attack Pakistan and teach a lesson for its continued intrusions in Indian borders.
Story first published: Monday, August 25, 2014, 16:26 [IST]