For Daily Alerts
Just In
காஷ்மீரில் திடீர் பனிச்சரிவில் புதையுண்டது ராணுவ முகாம்- வீரர்களை தேடும் பணி மும்முரம்!
ஜம்மு காஷ்மீரில் பயங்கர பனிச்சரிவு ஏற்பட்டது. இதில் ராணுவ முகாம் புதையுண்டு போனதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் திடீரென ஏற்பட்ட பனிச்சரிவில் ராணுவ முகாம் ஒன்று புதையுண்டு போனது. பனிச்சரிவில் சிக்கிய ராணுவ வீரர்களைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சுந்தர்பால் மாவட்டம் சோனாமாக் என்ற இடத்தில் இன்று பெரும் பனிச்சரிவு ஏற்பட்டது. பனிகுன்று ஒன்று சரிந்து ராணுவ முகாம் மீது விழுந்தது.
இதில் அந்த ராணுவ முகாம் அப்படியே புதையுண்டு போனது. பனிச்சரிவில் சிக்கி புதையுண்ட ராணுவ வீரர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இன்று காலை பந்திபோரா பகுதியில் பனிச்சரிவில் சிக்கி 4 பேர் உயிரோடு புதைந்ததாகவும் செய்திகள் வெளியாகி இருந்தன.
Comments
English summary
Avalanche hits army camp in Sonamarg, Jammu and Kashmir.
Story first published: Wednesday, January 25, 2017, 13:24 [IST]