குஜராத்தில் ஆட்சியை பிடிப்பது யார்?... இந்தியா டுடே- ஆக்ஸிஸ் மை இண்டியா கணிப்பு #GujaratExitPoll
குஜராத் மாநிலத்தில் ஆட்சியை பிடிப்பது யார் என்பது குறித்து இந்தியா டுடேவும் ஆக்ஸிஸ் இண்டியாவும் கருத்து கணிப்பை வெளியிட்டுள்ளன.
Recommended Video
காந்திநகர்: குஜராத் மாநிலத்தில் ஆட்சியை பிடிப்பது யார் என்பது குறித்து இந்தியா டுடேவும் ஆக்ஸில் இண்டியாவும் தங்கள் கருத்து கணிப்புகளை வெளியிட்டுள்ளன. அதில் பாஜகவே வெற்றி பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
குஜராத்தில் கடந்த 9 மற்றும் 14 ஆகிய தேதிகளில் இரு கட்டங்கள் மாநில சட்டசபை தேர்தல் நடைபெற்றது. மொத்தம் 182 தொகுதிகளை கொண்ட சட்டசபைக்கு நடத்தப்பட்ட தேர்தலில் வரும் 18-ஆம் தேதி வாக்குகள் எண்ணப்படுகின்றன.
அதற்குள்ளாகவே தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளை பல்வேறு செய்தி நிறுவனங்களும் அமைப்புகளும் எடுக்கத் தொடங்கிவிட்டன. அதன்படி இந்தியா டுடே- ஆக்ஸிஸ் மை இண்டியா ஆகியன இணைந்து நடத்திய கருத்து கணிப்பில் குஜராத்தில் மீண்டும் பாஜக ஆட்சி அமையும்.
இதில் பாஜக 99 முதல் 113 தொகுதிகளையும் காங்கிரஸ் 68 முதல் 82 தொகுதிகளையும் பெறும் என்கிறது கருத்து கணிப்பு முடிவுகள்.