5 லட்சத்து 51 ஆயிரம் விளக்குகள்.. தீபாவளியையொட்டி ஒளி வெள்ளத்தில் அயோத்தி
அயோத்தி: உத்தர பிரதேச மாநிலத்தின், அயோத்தி நகரம் முழுக்க 5 லட்சத்து 51 ஆயிரம் விளக்குகள் ஏற்றப்பட்டு தீபாவளி சிறப்பாக கொண்டாடப்பட்டது.
அயோத்தியை தலைமையிடமாகக் கொண்டு ஆட்சி செய்தார் ராமபிரான் என்கிறது ராமாயண காப்பியம். வனவாச காலத்துக்கு பிறகு, ராமர், சீதா பிராட்டியுடன் புஷ்பக விமானத்தில் அயோத்திக்கு திரும்பியதாக நம்பப்படுகிறது.
அதை நினைவுகூறும் விதமாக அயோத்தியில் இன்று தீப உற்சவம் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசு அமைந்த பிறகு ஆண்டுதோறும் இவ்வாறு தீப உற்சவம் நடத்தப்படுகிறது.
விடிந்தால் தீபாவளி.. வெள்ளிக்கிழமை இரவு வரை தமிழக கடைகளில் கூட்டமோ கூட்டம்
#WATCH: Earthen lamps lit on the bank of River Saryu in Ayodhya as part of 'Deepotsava' celebrations. #Diwali pic.twitter.com/JzdhP7101y
— ANI UP (@ANINewsUP) November 13, 2020
இதில், கல்லூரி மாணவர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் உள்ளிட்டவற்றை சேர்ந்த 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்று அயோத்தி நகரில் சரயூ நதிக் கரை முழுக்க 5 லட்சத்து 51 ஆயிரம் விளக்குகளை ஏற்றி வைத்தனர். அயோத்தி நகரை பார்க்கும்போது முழுக்க முழுக்க தீபங்களால் விழாக்கோலம் பூண்டு காட்சியளித்தது.