For Daily Alerts
Just In
அடுத்த தீபாவளிக்குள் அயோத்தியில் ராமர் கோவில் ரெடி... பகிரங்கமாக அறிவித்த சு.சுவாமி
அடுத்த தீபாவளிக்குள் அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டுவிடும் என சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார்.
பாட்னா: அடுத்த தீபாவளிக்குள் அயோத்தியில் ராமர் கோயில் கட்டி முடிக்கப்பட்டுவிடும் என பாஜக ராஜ்யசபா எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சுப்பிரமணியன் சுவாமியின் விராத் ஹிந்துஸ்தான் சங்கத்தின் சார்பில் பாட்னாவில் கருத்தரங்கம் நடைபெற்றது. அதில் சுப்பிரமணியன் சுவாமி பேசியதாவது:
அயோத்தியில் ராமர் கோவில் விரைவில் கட்டப்பட்டுவிடும். இந்த வாரம் நாம் தீபாவளியை கொண்டாடுகிறோம்.
அடுத்த தீபாவாளிக்கு ராமர் கோவில் பக்தர்களை வரவேற்கும். வடக்கு பீகாரில் சீதை பிறந்த மண்ணில் பிரமாண்ட கோவிலை கட்ட விராத் ஹிந்துஸ்தான் சங்கம் முயற்சிகள் மேற்கொள்ளும்.
இவ்வாறு சுப்பிரமணியன் சுவாமி கூறினார்.
Comments
English summary
BJP Rajya Sabha MP Subramanian Swamy said construction of the proposed Ram temple in Ayodhya will be ready to receive devotees by next Diwali.
Story first published: Monday, October 16, 2017, 11:02 [IST]