For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆசாதி.. பிரசித்தி பெற்ற கோஷத்துடன் பழையபடி களம் வந்தார் கன்ஹையா குமார்

Google Oneindia Tamil News

பாட்னா: ஜே.என்.யூ மாணவர் அமைப்பின் முன்னாள் தலைவரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினருமான கன்ஹையா குமார் தனது பிரசித்தி பெற்ற "ஹம் லீக் ரஹங்கே ஆசாதி" கோஷத்தோடு மீண்டும் களத்திற்கு வந்துள்ளார். மாணவர்களுக்கு எதிரான வன்முறைக்கு எதிராக அவர் பீகாரில் ஆயிரக்கணக்கானோர் மத்தியில் ஆவேசமாக உரையாற்றினார்.

பீகாரின் புர்னியா பகுதியில், நடந்த பொதுக் கூட்டத்தில், கன்ஹையா குமார் குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) மற்றும் டெல்லியின் ஜாமியா மிலியா பல்கலைக்கழக மாணவர்கள் மீது போலீஸ் எடுத்த நடவடிக்கை ஆகியவற்றைக் கண்டித்து கோஷங்களை எழுப்பினார். பதிலுக்கு கூடியிருந்த கூட்டம் "ஆசாதி" அதாவது விடுதலை என்று உரத்த கோஷம் எழுப்பியது.

Azaadi: Kanhaiya Kumar slogan to protest against Jamia violence

மேலும் அவர் பேசுகையில், எங்களை நீங்கள் குடிமக்களாகக் கருதவில்லையென்றால் நாங்கள் உங்களை அரசாக கருத மாட்டோம். பாராளுமன்றத்தில், வேண்டுமானால் உங்களுக்கு பெரும்பான்மை இருக்கலாம். ஆனால், மக்கள் மன்றத்தில் எங்களுக்குத்தான் ஆதரவு இருக்கிறது.

இந்த போராட்டம் இஸ்லாமியர்களுக்கான போராட்டம் என்று சொல்ல மாட்டேன். இந்தியா சாவர்க்கர் நாடாக மாறிவிடக் கூடாது என்பதற்கான போராட்டம்தான் இது. அரசியலமைப்பைக் காப்பாற்றுவதற்காக நாம் மேற்கொண்டிருக்கும் சண்டை இது. அமைதியாகப் போராடி நம் எதிர்ப்பைத் தெரிவிக்கவேண்டும். இவ்வாறு கன்னையா குமார் பேசினார்.

போராட்டக்காரரை மிதிக்கும் போலீஸ்.. வைரலாகும் பரபரப்பு படம்.. இது உண்மையா.. ? போராட்டக்காரரை மிதிக்கும் போலீஸ்.. வைரலாகும் பரபரப்பு படம்.. இது உண்மையா.. ?

English summary
Former JNU students' body president and CPI member Kanhaiya Kumar has brought back his famous "hum leke rahenge azaadi" slogans.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X