பாகுபலி வசூலை பார்த்து பயந்து வருது: சல்மான் கான்
மும்பை: பிரபாஸ் நடிப்பில் வெளியான பாகுபலி படத்தின் வசூலை நினைத்து பயந்து வருவதாக பாலிவுட் நடிகர் சல்மான் கான் தெரிவித்துள்ளார்.
கபீர் கான் இயக்கத்தில் சல்மான் கான், கரீனா கபூர் நடித்துள்ள பஜ்ரங்கி பாய்ஜான் படம் ரம்ஜான் பண்டிகை ஸ்பெஷலாக இன்று ரிலீஸாகியுள்ளது. படத்தை பார்க்க சல்மான் ரசிகர்கள் தியேட்டர்களில் முந்தியடிக்கின்றனர். ரம்ஜானையொட்டி ரிலீஸான சல்மானின் படங்கள் ஹிட்டாகியுள்ளன. அதே போன்று பஜ்ரங்கி பாய்ஜானும் ஹிட்டே தான் என்கிறார்கள் சல்மான் ரசிகர்கள்.
இந்நிலையில் இது குறித்து சல்மான் கான் கூறுகையில்,
பாகுபலி அளவுக்கு எங்களால் சாதிக்க முடியும் என்று தோன்றவில்லை. பாகுபலி படத்தின் பாக்ஸ் ஆபீஸ் வசூலை பார்த்தால் பயமாகத் தான் உள்ளது. பாகுபலி ஒரு நல்ல படம். சினிமாவில் வசூலும் முக்கியமாக உள்ளது என்றார்.
சிங்கிளாக இருக்கும் சல்மான் கான் திருமணம் செய்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படும் வேளையில் அவர் என்னவென்றால் முன்னாள் காதலிகளுடன் ஊர் சுற்றிக் கொண்டிருக்கிறார்.