For Daily Alerts
Just In
இளைஞரை கடத்தியதாக ராம்தேவ் சகோதரர் மீது புகார்
உத்தரப்பிரதேச மாநிலம் முசாபர்நகரைச் சேர்ந்த நிதின் தியாகி என்ற இளைஞரை தாக்கி ஹரித்வாரில் உள்ள ராம்தேவின் பதஞ்சலி யோகா பீடத்தில் சட்டவிரோதமாக அடைத்துவைத்துள்ளதாக போலீசில் புகார் கூறப்பட்டது. இதைத் தொடர்ந்து போலீசார் பதஞ்சலி யோகா பீடத்துக்கு சென்று அந்த இளைஞரை மீட்டனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நூற்றுக்கணக்கான பாஜக தொண்டர்கள் பதஞ்சலி யோகா பீடம் முன்பு ஒன்றுதிரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். தற்போது ராம்தேவின் சகோதரர் ராம்பரத் தலைமறைவாக உள்ளார்.
இந்நிலையில் இந்த புகாரின் பின்னணியில் காங்கிரஸ் கட்சியினரே இருப்பதாகவும் காங்கிரஸின் சதியால்தான் புகார் பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் பாபா ராம்தேவ் குற்றம்சாட்டியுள்ளார்.
Comments
English summary
Noted yoga guru Baba Ramdev is in fresh trouble as Ramdev's former aide Naresk Malik was rescued from Patanjali ashram in Haridwar after he was allegedly kidnapped and assaulted by Ramdev's brother Rambharat.
Story first published: Tuesday, October 22, 2013, 12:27 [IST]