For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பதாவ்ன் சகோதரிகள் சீரழிக்கப்பட்டு உயிருடன் மரத்தில் தொங்கவிடப்பட்டுள்ளனர்

By Siva
Google Oneindia Tamil News

லக்னோ: உத்தர பிரதேசத்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சகோதரிகள் உயிருடன் மரத்தில் தொங்கவிடப்பட்டது பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உத்தர பிரதேச மாநிலம் பதாவ்ன் மாவட்டம் கத்ரா கிராமத்தில் இயற்கை உபாதையை கழிக்க சென்ற 14 மற்றும் 15 வயது சகோதரிகள் பலரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டு மரத்தில் பிணமாக தொங்கவிடப்பட்டனர். நாட்டையே உலுக்கிய இந்த வழக்கில் 2 கான்ஸ்டபிள்கள் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

Badaun cousins were hanged alive, autopsy report says

இந்நிலையில் அவர்களின் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் சகோதரிகள் பலாத்காரம் செய்யப்பட்டு, சித்ரவதை செய்யப்பட்டு உயிருடன் மரத்தில் தொங்கவிடப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து கைது செய்யப்பட்டுள்ளவர்களின் தலைமுடி, ரத்தம், நகம் மாதிரி எடுத்து பரிசோதனை செய்ய போலீசார் நீதிமன்றத்திடம் அனுமதி கோரியுள்ளனர்.

English summary
Teenage cousins who were sexually assaulted in Badaun were alive when they were hanged from a tree, said autopsy report.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X