நைஜீரியர்களால் நாடு முழுக்க பிரச்சினைதான்... கோவா முன்னாள் முதல்வர் பேச்சால் சர்ச்சை
பானாஜி: நைஜீரிய நாட்டுக்காரர்களால் கோவாவில் மட்டுமல்ல நாடு முழுக்க பிரச்சினைதான் ஏற்படுகிறது. எனவே அவர்கள் இந்தியாவிற்கு சுற்றுலா வருவதை மத்திய அரசு தடைவிதிக்க வேண்டும் என கோவா முன்னாள் முதல்வர் ரவிநாயக் கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கோவாவுக்கு பல நாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகிறார்கள். ஆனால் நைஜீரியர்களால்தான் கோவா மக்களுக்கு பிரச்சினை ஏற்படுகிறது.
இது குறித்து கோவா முன்னாள் முதல்வர் ரவிநாயக் செய்தியாள்ர்களிடம் கூறுகையில், நைஜீரியர்கள் இந்தியாவிற்கு சுற்றுலா வருவதை மத்திய அரசு தடை விதிக்க வேண்டும். இந்தியாவில் உள்ள பெருநகரங்களில் நைஜீரியவர்களால் பிரச்சினைகள் ஏற்படுகின்றது. பெங்களூரில் கூட ஆம் ஆத்மி கட்சி தொண்டர்களுக்கும் நைஜீரியகாரர்களுக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது.
நைஜீரியர்களால் எல்லா இடங்களிலும் பிரச்சினைகள் ஏற்படுகின்றன. நமக்கு நைஜீரிய சுற்றுலா பயணிகள் தேவையே இல்லை. கோவாவில் மாணவர்கள் மீது சில நைஜீரியாக்கள் தாக்குதல் நடத்தி உள்ளனர். இந்த நடவடிக்கைகள் குறித்து விசாரணை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.