For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கொலை மூலம் மதக்கலவரம் ஏற்படுத்த திட்டம்: சோட்டா ஷகீல் கூட்டாளி பெங்களூரில் கைது

By Veera Kumar
Google Oneindia Tamil News

பெங்களூர்: நிழலுலக தாதா சோட்டா ஷகீல் கூட்டாளி பெங்களூரில் கைது செய்யப்பட்டார்.

தாவூத் இப்ராஹிமின் வலதுகரம் சோட்டா ஷகீல். இவரது கூட்டாளி சையது நியாமத் (28). இவர் பெங்களூர் பிஸ்மில்லா நகர் 3வது கிராஸ் பகுதியிலுள்ள வீட்டில் பதுங்கியிருக்கும் தகவல் போலீசாருக்கு கிடைத்தது.

Bangalore CCB police arrests Chota Shakeel aid Syed Niyamat

இதையடுத்து நகர குற்றப்பிரிவு போலீசார், அந்த வீட்டில் அதிரடியாக சோதனை நடத்தி சையது நியாமத்தை கைது செய்துள்ளனர். விசாரணையின்போது, பெங்களூரில் சில முக்கிய தலைவர்களை கொலை செய்து, அதன் மூலம், மத கலவரத்தை உருவாக்க அவன் திட்டமிட்டிருந்தது அம்பலமாகியுள்ளது.

சையது நியாமத் மீது, பெங்களூரின் திலக்நகர் காவல் நிலையத்தில் ஏற்கனவே ஒரு கொலை வழக்கு நிலுவையிலுள்ளது. இதுதவிர, கடத்தல், மிரட்டல், கொலைமுயற்சி என நகரில் மட்டும் 7 வழக்குகள் நிலுவையிலுள்ளது.

English summary
Bangalore CCB police arrests Chota Shakeel aid Syed Niyamat. police says he was conspiring to eliminate some leaders which can led to communal tension.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X