For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சசிகலாவிற்கு பரோல் தர முடியாது... பெங்களூரு சிறை நிர்வாகம் மறுப்பு!

சசிகலாவிற்கு பரோல் வழங்க சிறை நிர்வாகம் மறுப்பு தெரிவித்துவிட்டது.

By Gajalakshmi
Google Oneindia Tamil News

Recommended Video

    கணவர் நடராஜனை சந்திப்பதற்காக சசிகலா பரோலில் வருகிறார் ?

    பெங்களூரு: சசிகலாவிற்கு பரோல் வழங்க பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறைத்துறை மறுப்பு தெரிவித்துவிட்டது.

    சசிகலாவின் கணவர் நடராஜன் உடல்நிலை பாதிக்கப்பட்டு கடந்த 16ம் தேதி இரவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் நேற்று கூறியது.

    Bangalore prison rejected Parole for sasikala

    நடராஜனுக்கு செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டிருப்பதாகவும் உடல்நிலையில் முன்னேற்றம் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளதாக நடராஜனின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் நடராஜனை பார்ப்பதற்காக பரோலில் வெளிவர சசிகலா பெங்களூரு சிறைத்துறைக்கு விண்ணப்பித்துள்ளார்.

    சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் பிப்ரவரி 15, 2017 முதல் தண்டனை அனுபவித்து வரும் சசிகலா கடந்த அக்டோபர் மாதத்தில் நடராஜனுக்கு உறுப்பு மாற்று சிகிச்சை செய்யப்பட்ட போது அவரை பார்த்துக் கொள்வதற்காக 5 நாட்கள் பரோல் வழங்கப்பட்டது. இந்நிலையில் இன்று மீண்டும் சசிகலா கோரிய பரோலை வழங்க சிறைத்துறை மறுத்துள்ளது. அண்மையில் பரோல் வழங்கப்பட்ட நிலையில், இந்த முறையும் பரோல் தர முடியாது என்றும், நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் உயிரிழப்புகள் நேர்ந்தால் மட்டுமே சிறை விடுப்பு தர முடியும் என்றும் சிறைத்துறை கூறிவிட்டதாக தெரிகிறது.

    English summary
    Bangalore Prison rejected Parole for Sasikala, as she left from jail in the october month only, and sources saying prison officials informed sasikala parole will be granted if any close family members death only.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X