For Quick Alerts
For Daily Alerts
Just In
ஜெகன் சொத்து குவிப்பு வழக்கில் கிரிக்கெட் வாரிய தலைவர் சீனிவாசன் கோர்ட்டில் ஆஜர்
ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி, தமது தந்தையும், ஆந்திர முன்னாள் முதல்வருமான ராஜசேகர ரெட்டியின் பெயரை பயன்படுத்தி வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக சி.பி.ஐ. அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிக்கையில் இந்திய கிரிக்கெட் வாரியத் தலைவர் என்.சீனிவாசனின் நிறுவனமான இந்தியா சிமென்ட் பெயரும் சேர்க்கப்பட்டது.
இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்காக இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் சீனிவாசன் இன்று ஹைதராபாத்தில் சி.பி.ஐ. நீதிமன்றத்தில் ஆஜரானார். அவருடன் இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜராகி இருந்தனர்.
Comments
bcci srinivasan jagan wealth case cbi court பிசிசிஐ சீனிவாசன் ஜெகன் சொத்து குவிப்பு சிபிஐ நீதிமன்றம்
English summary
Board of Control for Cricket in India (BCCI) President N Srinivasan appeared before a CBI special court in Hyderabad on Friday. He was summoned in connection with the disproportionate assets case of the YSR Congress Party chief YS Jagan Mohan Reddy.
Story first published: Friday, November 1, 2013, 12:59 [IST]