For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மாட்டிறைச்சி.. முஸ்லிம் வாலிபர் கொலை வழக்கில் ஒரு குற்றவாளி கைது! விசாரணை மந்தம்

By Veera Kumar
Google Oneindia Tamil News

டெல்லி: மாட்டிறைச்சி கொண்டு சென்றதாக குற்றம்சாட்டி டெல்லி அருகே நடந்த இளைஞரின் கொலை சம்பவத்தில் ஒரு குற்றவாளியை மட்டுமே காவல்துறை கைது செய்துள்ளது.

16 வயது ஜுனைட் கான், அவரின் சகோதரர் ஹசீப் மற்றும் 2 உறவுக்கார சிறுவர்கள் ஆகியோர் ஹரியானாவில் இருந்து டெல்லிக்கு ரம்ஜான் பண்டிகைக்கு துணிமணிகளை வாங்க வந்திருந்தனர். இதன்பிறகு, சொந்த ஊருக்கு திரும்ப டெல்லி- பல்லப்கார் பயணிகள் ரயிலில் துக்லகாபாதில் ஏறினர்.

Beef clash: One man has been arrested for Junaid's death

அவர்கள் மாட்டிறைச்சி வைத்திருந்ததாக கூறி 20 பேர் கொண்ட, ஒரு கும்பல் 4 பேரின் மீது கத்தி, கூர்மையான ஆயுதங்களால் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியது. ரயிலில் ஏராளமான பயணிகள் இருந்தும் யாரும் அவர்களை தடுக்கவில்லை.

இதைத் தொடர்ந்து அவர்கள் 4 பேரையும் மதுரா செல்லும் வழியில் உள்ள அசாவதி ரயில் நிலையம் அருகே ஓடும் ரயிலில் இருந்து வீசினர். 4 பேரில் ஜூனைட் கான் உயிரிழந்துவிட்டார்.

இதுகுறித்து சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறுகையில், இதுபோன்ற சம்பவங்களை சகித்துக்கொள்ள முடியாது என்றார். ஆனால் இதுவரை 1 குற்றவாளியை மட்டுமே போலீசார் கைது செய்துள்ளனர். ரமேஷ் என்ற அந்த வாலிபர் குடி போதையில் இருந்ததாகவும், சிலர், மாட்டிறைச்சி சாப்பிடுவதாக கூறி 4 இளைஞர்களை கைகாட்டியதாகவும், எனவே தாக்கியதாகவும் ரமேஷ் வாக்குமூலம் அளித்துள்ளார்.

English summary
So far, one man has been arrested for Junaid's death, though the survivors of the attack say murderous mob had at least 20 members.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X