For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மம்தாவை கைது செய்தால், மேற்கு வங்கம் பற்றி எரியும்: திரிணாமுல் காங். எம்.பி. எச்சரிக்கை

By Mathi
Google Oneindia Tamil News

கொல்கத்தா: சாராத சிட் பண் மோசடி வழக்கில் முதல்வர் மமதா பானர்ஜியை கைது செய்தால் மேற்கு வங்கம் பற்றி எரியும் என்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்.பி. இத்ரிஸ் அலி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சாரதா சிட் பண்ட் மோசடி வழக்கில் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பிக்கள் குணால் கோஷ், சிரின்ஜோய், மாநில அமைச்சர் மதன் மித்ரா ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் சாரதா சிட் பண்ட் மோசடியில் திரிணாமுல் கட்சியின் மற்றொரு எம்.பி சதாப்தி ராய்க்கு சிபிஐ சம்மன் வழங்க இருக்கிறது.

Bengal will burn if Mamata is arrested, TMC MP warns

இந்த மோசடியில் மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜிக்கும் தொடர்பிருப்பதாகவும் அவரை சிபிஐ நெருங்குவதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் திரிணாமுல் எம்.பி. இத்ரிஸ் அலி இந்த விவகாரத்தில், மம்தாவை கைது செய்தால், மேற்கு வங்கம் பற்றி எரியும் என்று மிரட்டல் விடுத்துள்ளார்.

இத்ரிஸ் அலியின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

English summary
In yet another standoff between the TMC and Centre over Saradha scam, Trinamool MP Idris Ali has warned Centre of dire consequences if chief minister Mamata Banerjee is arrested.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X